Thursday, November 26, 2015
தூத்துக்குடி துறைமுகம் வழியாக செம்மர கட்டைகள் கடத்தப்பட்டது எப்படி? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக நாள்தோறும் ஏராளமான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் கடந்த அக்டோபர் மாதம் 14-ந்தேதி பருத்தி ஆடைகள் என்ற பெயரில் கண்டெய்னர்களில் பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்ட பிறகு, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட பார்சல்களில் செம்மர கட்டைகள் கடத்தப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து இந்த கட்டைகளை பிடிக்க கொச்சி, குஜராத் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களுக்கு தகவல் கொடுத்து முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்குள் செம்மர கட்டைகள் துபாய் நாட்டில் உள்ள ஜெபலலி என்ற துறைமுகத்துக்கு போய்ச்சேர்ந்தது. பின்னர் அந்த துறைமுகத்துக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்து செம்மர கட்டைகளை தூத்துக்குடி துறைமுகத்துக்கு மீண்டும் வரவழைத்தனர். அவை நேற்று முன்தினம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன. அந்த பார்சல்களை பரிசோதனை செய்த போது, உள்ளே ரூ.2¼ கோடி மதிப்புள்ள 7 டன் செம்மர கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகம் வழியாக செம்மர கட்டைகள் தப்பியது எப்படி? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி துறைமுகத்தில் மொபல் ஸ்கேனர் வசதி உள்ளது. மேலும் புதிதாக பெரிய ஸ்கேனர் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மொபல் ஸ்கேனர் மூலம் இறக்குமதி செய்து நமது நாட்டுக்குள் கொண்டு வரப்படும் பொருட்களை மட்டுமே சுங்கத்துறை பரிசோதனை செய்வார்களாம். அதுவும் சந்தேகப்படும் பார்சல்களையும், குறிப்பிட்ட பார்சல்கள், கண்டெய்னர்களை மட்டுமே சோதனை செய்வார்கள். ஆனால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் ஸ்கேன் செய்யப்படாதாம். எனவே பருத்தி ஆடை என்ற உடன் அதிகாரிகள், அவற்றை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்து இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...
0 comments:
Post a Comment