Friday, November 27, 2015
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் கிராமத்தில் தொடர் மழையால் தாழ்வான பகுதியில் வெள்ள சூழ்ந்து கொண்டது. வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து 45க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கன் சமூகத்தை சார்ந்த பெண்கள் குழந்தைகள் என பொதுமக்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். அங்கு காவல் பணியில் இருந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பொன்தேவி, எஸ்.பி.ஏட்டு உட்பட பல காவலர்கள் சேர்ந்து அவர்களை மீட்டு ஜான்பாப்பிக்ஸ் உயர்நிலை பள்ளியில் தங்க வைத்து விட்டு முதலில் தாசில்தார் நா.பா.நாகராஜனை தொடர்பு கொண்டார்கள். தாசில்தரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
உடனடியாக எஸ்.ஐ.பொன்தேவி நிலைமையின் அவசரம் கருதி எஸ்.பி.அஸ்வின் கோட்னிஸிடம் விவரத்தை கூறினார்கள். எஸ்.பி.யின் அறிவுறுத்தலின் படி களத்தில் இறங்கினார்கள் புதியம்புத்தூர் காவல்நிலைய காவலர்கள்.
23.11.2015 முதல் 27.11.2015 வரை தங்கியிருந்த மக்களுக்கு காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என நல்ல உணவு மற்றும் சுத்தமான குடிநீர் மற்றும் மருத்துவ உதவி வழங்கி இன்று வரை மனித நேயத்துடன் உதவி வருகிறார்கள்; புதியம்புத்தூர் காவலர்கள்.
இதுபற்றி, எஸ்.ஐ. பொன்தேவியிடம் தொலைபேசி மூலம் கேட்டதற்கு: எஸ்.பி. ஐயா-வின் அறிவுறுத்தலின்படி எங்களது காவல்நிலைய காவலர்கள் சேர்ந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் செய்ய ஆரம்பித்தோம். பின்னர், அப்பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றோம். தனியார் ஜேசிபி மூலமும், தீயணைப்பு துறை மூலமாகவும் வீடுகளை சுற்றியுள்ள வெள்ள நீரை அகற்றி வருகிறோம். என்று கூறினார்.
காட்டு நாயக்க சமுதாய தலைவரிடம் கேட்ட போது: எஸ்.பி.ஐயா தான் எங்களை காப்பாற்றிய சாமி. எங்களது ஊருக்கு வெள்ளநீர் புகுந்ததும் நாங்கள் என்ன செய்வதென்று தவித்து வந்த நேரத்தில், எஸ்.பி. ஐயா தான் எங்களுக்கு, தங்க இடம், சாப்பிட உணவு, குடிக்க தண்ணீர், இலவச மருத்துவ வசதி போன்ற அனைத்து உதவிகளையும் நாங்கள் கேட்காமலேயே செய்து தந்தார். அவர் நூறாண்டு வாழ வேண்டும் என்று மனமாற பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பல ஊர்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்த வேளையில் உதவிக்கு ஓடோடி வந்த புதியம்புத்தூர் காவல் நிலைய காவலர்களின் செயலை பாராட்டி வருகிறார்கள் பொதுமக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...


0 comments:
Post a Comment