Sunday, February 16, 2020

On Sunday, February 16, 2020 by Tamilnewstv in ,    



திருச்சியில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை அமைச்சர்கள் இன்று  தொடங்கி வைத்தனர்..

 மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் சிறிய திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் கடந்த 10 ஆண்டுகளாக 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 2019- 2020 ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து,கைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, இறகுபந்து, டென்னிஸ் ஜூடோ, குத்துச்சண்டை, நீச்சல் மற்றும் தடகள போட்டிகள் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது..

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர்  போட்டியை துவக்கி  வைத்தனர்.

மேலும் இப்போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
On Sunday, February 16, 2020 by Tamilnewstv in ,    

திருச்சி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் முதுகலை பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது

அப்போது காலியாக உள்ள உதவி இயக்குனர் ஏ டி பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும் 100% தேர்ச்சி வழங்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரில் விருது வழங்கி ஊக்கமளிக்க வேண்டும் மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள 32 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 46 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மாணவர்களின் நலன் கருதி 12 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு அம்பேத்கர் சிறப்பு வழிகாட்டி புத்தகம் உடனே வழங்க வேண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு முன் ஏற்கனவே பணிபுரிந்து வரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலத் தலைவர் செந்தில்குமார் பேட்டியளித்தார்

Saturday, February 15, 2020

On Saturday, February 15, 2020 by Tamilnewstv in ,    
THE TAMIL NADU
PROTECTION OF INTERESTS OF DEPOSITORS
(IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997

(TAMIL NADU ACT 44 OF 1997)
(As modified upto 31st October 2018)
CHAPTER -1

1. Short title and commencement:-
(1) This act may be called the Tamil Nadu Protection of Interests of
Depositors (in Financial Establishments) Act, 1997.


(2) It shall come into force at once.
2. Definitions:- In this Act, unless the context otherwise requires:-
(1) “Competent authority” means the authority appointed under section 4;
(2) “deposit” means the deposit of money either in one lump sum or by
instalments made with the Financial Establishment for a fixed period, for
interest or for return in any kind or for any service;
(3) “Financial Establishment” means an individual, an association of
individuals, a firm or a company registered under the companies Act, 1956
(Central Act 1 of 1956) carrying on the business of receiving deposits under any
scheme or arrangement or in any other manner but does not include a
corporation or a co-operative society owned or controlled by any State
Government: or the Central Government, or a banking company as defined in
section 5(c) of the Banking Regulation Act 1949 (Central Act X of 1949).
(4) “Government” means the State Government.
CHAPTER – II
3. Attachment of properties on default of return of deposits:
Notwithstanding anything contained in any other law for the time being in
force,

மேலும் காண்போம்
On Saturday, February 15, 2020 by Tamilnewstv in ,    
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ?


திருச்சி மன்னார்புரத்தில்  தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறுவனம் எல்பின் இந்நிறுவனத்தின் இயக்குனர் அழகர்சாமி ( எ ) ராஜா, SRK ( எ ) ரமேஷ்  மற்றும் பங்குதாரர்கள் மீதும் பலரை ஏமாற்றிய பல  வழக்குகள் பல மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ளது.

தற்போது மதுரை திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக துரிதமாக செயல்பட்டு எல்பின் நிறுவனத்தை மூடி சீல் வைக்கவுகும் ,ராஜா, ரமேஷ் இருவரையும் கைது செய்யவும்  முழு முயற்ச்சியில்  ஈடுபட்டு வருவதால், இவர்கள்  சார்ந்திருந்த கட்சியின் தலைவர்  இவர்களது செயல்பாடுகளுக்கு ஒத்து வராததால் தானோ

தற்போது காவல்துறையினரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் எச். ராஜா அவர்களை நேரில் சந்தித்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.
எச். ராஜா அவர்களை நேரில் சந்தித்தபோது  கிலோ கணக்கில் எடையுள்ள  விக்கிரகம் ஒன்றை பரிசுப் பொருளாக வழங்கி உள்ளனர்.

எங்களை எப்படியாவது வழக்கில் இருந்து காப்பாற்றுங்கள் எனக் கூறி தங்க விக்கிரகத்தை வெள்ளி முலாம் பூசி வழங்கியதாக ஒரு தகவல் வருகிறது இது உண்மையா பொய்யா என தெரியவில்லை.

ஆனால் அழகர்சாமி ( எ) ராஜாவும் ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் ரகசியமாகச் சென்று எச். ராஜாவை சந்தித்ததன் பின்னணி என்ன ? பொதுமக்கள் ஒரே குழப்பத்தில் உள்ளனர்.
On Saturday, February 15, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பிப் 15

தஞ்சையில் நடைபெறும் இந்து மக்கள் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனசதாப்தி ரயில் மூலம் கோவையிலிருந்து அர்ஜுன் சம்பத் தஞ்சாவூர் சென்றார். வழியில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் சிறப்பான முறையில் உள்ளது. குறிப்பாக பெண்கள், முதியவர்கள் வளர்ச்சித் திட்டம், அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, நீர்நிலைகள் மேம்பாடு திட்டம், விவசாயிகள், மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் ஆகியவை வரவேற்கத்தக்கது. கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய மசூதிகளில் பராமரிப்புக்கு தலா 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் கோயில்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். முதியோர் பராமரிப்பு இல்லம் மாவட்டந்தோறும் தொடங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கிறிஸ்தவ தன்னார்வத் தொண்டு நிறுவனமத்துடன் இணைந்து செய்வது ஆபத்தானது. கல்வி, சேவை என்ற பெயரில் ஏற்கனவே மதமாற்றம் நடைபெற்று வருகிறது. அரசு நேரடியாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் ராமகிருஷ்ணா சேவை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்று கூறி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த முறை 2,000 பேர் திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். குடியுரிமை சட்ட விவகாரத்தை அரசியல் பிரச்சாரமாக மாற்றி அப்பாவி  இஸ்லாமியர்களை பயன்படுத்துகின்றனர். நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்தது நடந்தது தவறான முன்னுதாரணமாகும். போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து  இதை சரியான முறையில் கையாள வேண்டும்.
 திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் சுயலாபம் தேடுவதற்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்டி விடவும் முயற்சி செய்கிறார். இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும். மத வழிபாட்டுத் தலங்களில் தேசத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டும். எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும். அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். நேற்றிரவு மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டம் காரணமாக பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஸ்டாலின் நேற்றைய இரவு கருப்பு இரவு என்று கூறியது சரிதான். அதிகமான பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கிக்காக திமுக இது போன்று செயல்படுகிறது. குடியுரிமை சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் மத்தியில் அவதூறு பிரச்சாரம் செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டிவிடும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. இது கண்டிக்கத்தக்கது. வெளிநாட்டு இஸ்லாமியர்கள் நம் நாட்டிற்குள் ஊடுறுவுவதற்காக ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் நடத்தி உள்ளார். திமுக கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்கிறது. இது பின்னாளில் திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
On Saturday, February 15, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பிப் 15

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தலைவர்
செ.கு. தமிழரசன் தலைமை வகித்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் தாக்கல் செய்த பட்ஜெட் ஒன்றோடு ஒன்று சார்ந்து உள்ளது. இரண்டு கருத்துக்களும் ஒரே கருத்தாக அமைந்துள்ளது. ஆனால் இரண்டு பட்ஜெட்களிலும் தலித் சமூக வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வில்லை. இது ஏமாற்றமளிக்கிறது. தலித் மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. தலித்களுக்கு என்று மத்திய மாநில அரசுகள் தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். பட்ஜெட்டில் தலித் நலன் சார்ந்த அறிவிப்புகள் இல்லாதது கண்டனத்திற்குரியது. குறிப்பாக தலித்களின் உயர் கல்விக்கு எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தான் ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரஜினிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், எதிர்பார்ப்பும் உள்ளது. அதனால் தான் அவரது கருத்துக்கள் அரசியல்வாதிகள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இத்தகைய விமர்சனங்கள் ரஜினிக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது. ரஜினி கட்சி துவங்கி கொள்கைகளை அறிவித்தால் அவரது கூட்டணி குறித்து வரவேற்போம். இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.

Friday, February 14, 2020

On Friday, February 14, 2020 by Tamilnewstv in ,    

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்த விசிக பிரமுகர்கள். காரணம் என்ன ?

மோசடி பேர்வழிகள் டெல்லியில் தஞ்சமா தமிழக காவல்துறைக்கு சவாலா

திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிறுவனம் எல்பின் .
இந்நிறுவனத்தின் இயக்குனர் அழகர்சாமி ( எ ) ராஜா மற்றும் அவரது தம்பி SRK (எ) ரமேஷ் குமார் ஆகிய இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பதவி வகித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்து வருபவர் இந்நிலையில் அவரது கட்சியின் மாநில பொறுப்பில் இருக்கும் ராஜா , ரமேஷ் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் ஹெச். ராஜா அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

எல்பின்  நிறுவனம் சட்டத்துக்கு புறம்பான வகையில் செயல்பட்டு வருவதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு தெரியவந்ததாலும் மேலும் அழகர்சாமி ( எ ) ராஜாவுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்க தலைவருக்கு அவர்கள் அளித்த கோரிக்கைக்கு அவர் செவி சாய்க்காததால் திருமாவளவன் அவர்கள் மீது அழகர்சாமி என்கிற ராஜா மற்றும் ரமேஷ் ரமேஷ் குமார் சகோதரர்கள் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்தையும் அறிந்தவர் அண்ணன் திருமாவளவன், இவர்களின் தில்லுமுல்லு அவருக்குத் தெரியாதா என உள்ளூர் கட்சியினர் கூறி வருகின்றனர்.


மேலும் மதுரையில் வெடி வியாபாரியிடம்  வெடி வியாபாரம் மோசடியில் ஈடுபட்டனர் பல்வேறு மோசடி வழக்குகள் இவர்கள் மீது தொடர்ந்த வண்ணம் உள்ளது பாதிக்கப்பட்டார்கள் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை தமிழக காவல்துறையினரால் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுத்து தீவிரமாகி வருகிறது என்ற தகவலை மோசடி சகோதரர்கள் தற்போதுகூட  டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின்  தலைவர் ஒருவருடன் கைதில் இருந்து  தப்பிப்பதற்கான வழி முறைகளைப் பற்றி பேசி வருவதாக தகவல் .

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திருவெங்கடம் யாதவ் அவர்களை இன்று டிஜிபி திரிபாதி அவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி சென்னை வரவைத்து என்பின் நிறுவனம் பற்றி டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு ஐஜி இடம் நேரடியாக புகார் மனுவினை  வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி உறுதி அளித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

தமிழகம் முழுவதும் இவர்கள் மீது ஏராளமான மோசடி வழக்குகள் உள்ளது எல்பின் நிறுவனம் முடக்கப்பட்டு பல ஆண்டு ஆகியும் அதில் பணம் முதலீடு செய்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர் அதில் பாஜகவை சேர்ந்த சில பிரமுகர்களும் நிறுவனத்தில் பண முதலீடு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது இந்நிலையில் அரசியலில் நேர்மையாக செயல்பட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இவர்களுக்கு சாதகமாக நடக்காததால் இவர்களுடைய மோசடியை மறைக்க மத்தியில் ஆளும்  அரசை நாடி உள்ளனரா இவர்கள் மோசடியில் பொதுமக்கள்  மற்றும் பாஜக பிரமுகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது
On Friday, February 14, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார்.


மாநில துணை பொதுச்செயலாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தார்.
 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜவகர், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மகிளா காங்கிரஸ் கட்சியினர் சமையல் எரிவாயு உருளை உடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய அரசை கண்டித்தும், சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஜவகர் செய்தியாளரிடம் பேசுகையில், கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு மக்களுக்கு எவ்விதமான

நன்மைகளையும் செய்யவில்லை. சமையல்  விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  செயல்களை சமாளிக்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்தம், காஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வந்து
மத்திய பாஜக அரசு மக்களை திசை திருப்புகிறது.

 இவற்றை கண்டிக்கும் வகையில் தான் மகிளா காங்கிரஸ் சார்பில் தற்போது நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.
On Friday, February 14, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி

திருச்சி மாவட்ட இறுதி வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

திருச்சியில் இறுதி வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவராசு  வெளியிட்ட பின்னர் செய்தியாளரகளுக்கு அளித்த பேட்டியில்

 9 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 22 லட்சத்து 97 ஆயிரத்து 106 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 11 லட்சத்து 18 ஆயிரத்து 900. பெண்கள் 11 லட்சத்து 77 ஆயிரத்து 997. மூன்றாம் பாலினமாக 209 பேரும் உள்ளனர். அதிக வாக்காளர்கள் உள்ள சட்டமன்ற தொகுதியாக ஸ்ரீரங்கம் விளங்குகிறது. இந்நிலையில் குறைவான வாக்காளர்கள் உள்ள சட்டமன்ற தொகுதியாக லால்குடி இருக்கிறது. புதிதாக 50 ஆயிரத்து 992 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 1741 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என கூறினார்.