Thursday, August 07, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் காவல்நிலைய சரகத்திட்குட்பட்ட கொடுவாய் ஏர்செல் நிறுவனத்தின் விநியோகஸ்தர் ஏர்வாய்ஸ் மொபைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சம்பத் 35. த/பெ .ராமசாமி என்பவர் தன்னிடம் ஏர்செல் சிம்கார்டு பொருட்டு வின்ணப்பம் செய்த அதே பகுதியை சேர்ந்த நபர்களிடம் அடையாள அட்டை மற்றும் விண்ணப்ப படிவங்களை பெற்றவர் . விண்ணப்பித்த நபர்களுக்கு தெரியாமலயே அவர்களின் விண்ணப்பம் போல் போலியாக தயாரித்து அவற்றை உண்மை ஆவணங்களாக ஏர்செல் நிறுவனத்தில் கொடுத்து 13 சிம்கார்டுகளை பெற்று அவற்றை வெவ்வேறு நபர்களுக்கு விற்று மோசடி செய்துள்ளார் . இது சம்மந்தமாக கிருஷ்ணன் 43 .த/பெ . பெரியசாமி என்பவர் . கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . திரு . அமித்குமார் சிங் .இ .கா .ப அவர்களால் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது . விசாரணையில் மோசடி செய்துள்ளது . உண்மை என தெரிய வரவே மேற்கண்ட எதிரி சம்பத் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது .
