Saturday, August 16, 2014
அரசுத் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்த பொதுமக்கள்
ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன்
தெரிவித்தார்.
மதுரையை அடுத்த குன்னத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசியது:
கிராமங்களைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். கிராமங்களின் மேம்பாட்டுக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தூய்மையான கிராமத்துக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.எந்தவொரு திட்டமாக இருந்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, சிறப்பாகச் செயல்படுத்த முடியும். நிலத்தடி நீர் குறைந்து வருவதால் மழைநீரைச் சேகரிக்க முன்வரவேண்டும். கல்வி என்பது அவசியத் தேவையாக இருக்கிறது. எனவே, அனைத்துக் குழந்தைகளையும் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்றார். இதில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநருமான பி. ரோகிணி ராம்தாஸ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மதுமதி, சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி, கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கோபிநாத், குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மதுரையை அடுத்த குன்னத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசியது:
கிராமங்களைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். கிராமங்களின் மேம்பாட்டுக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தூய்மையான கிராமத்துக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.எந்தவொரு திட்டமாக இருந்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, சிறப்பாகச் செயல்படுத்த முடியும். நிலத்தடி நீர் குறைந்து வருவதால் மழைநீரைச் சேகரிக்க முன்வரவேண்டும். கல்வி என்பது அவசியத் தேவையாக இருக்கிறது. எனவே, அனைத்துக் குழந்தைகளையும் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்றார். இதில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநருமான பி. ரோகிணி ராம்தாஸ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மதுமதி, சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி, கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கோபிநாத், குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
0 comments:
Post a Comment