Thursday, August 14, 2014
ஆப்பிரிக்க நாடுகளில் சமீப காலமாக பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நோயின் தாக்கம் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. இந்த நோய் நம் நாட்டில் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக விமான நிலையங்களில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளிடம் நோய் தொற்று உள்ளதா என் கண்காணிக்க அங்கு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் யாருக்காவது இந்த நோயின் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டால் உடனே அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கைம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மதுரை டீன் சாந்தகுமார் கூறியதாவது:–
மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எபோலா வைரஸ் தாக்கியவர்களின் சிகிச்சைக்காக 4 தனிப்பிரிவும், 12 படுக்கைவசதி கொண்ட பிரிவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவு, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லாத தனிப்பிரிவு ஆகும். எப்போலோ வைரஸ் தாக்கியவர்கள் சிகிச்சைக்கு வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கவே இந்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
Kathir Avan with ராதா கிருஷ்ணன் முகநூல் செய்தி. ஒரு ரூபாயில் ஒரு உயிர்….. இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள் பார்த்திருப்பீர்க...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் இதுவரை 135 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த ...
-
திருச்சி அப்போலோ மருத்துவமனை நரம்பியல் சிகிச்சையில் சாதனை 54 வயதுடையவர் படுக்கையில் மீண்டு எழுந்த சாதனை திருச்சி, கடந்த நவம்பர் மாத இறுதி...
-
சமயபுரத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பாடும் அபாயம் ! சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற ஆலயம் ஆகும். கொரோனா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment