Sunday, September 21, 2014
உடுமலை அருகே உள்ள ஸ்ரீராம் நகர் நகரைச்சேர்ந்தவர் கனகராஜ். இவர் உடுமலையில் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கனகராஜ் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கினார். அவரது மனைவி மகேஸ்வரி கீழ் வீட்டில் அறையில் தூங்கினார். இரவு வீட்டின் பின்பக்க கதவு பூட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதிகாலை 3.45 மணியளவில் மகேஸ்வரி படுத்திருந்த படுக்கை அறையில் ஏதோ சத்தம் கேட்டதும் அவர் எழுந்துள்ளார். அப்போது அங்கு பீரோ பக்கத்தில் யாரோ மர்ம நபர் நின்று கொண்டிருந்தார். உடனே மகேஸ்வரி யாரது என்று சத்தம் போட்டதும் அந்த நபர் வேகமாக பின்புறக்கதவு வழியாக தப்பிச்சென்றுள்ளார். அதன் பின்பு மகேஸ்வரி வீட்டிற்குள் சென்று பார்த்த போது 5¼ பவுன் செயினை காணவில்லை. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும். இது குறித்து மகேஸ்வரி உடுமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம மனிதனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment