Sunday, September 21, 2014
வால்பாறையை அடுத்துள்ள ஒரு தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகம் தங்களது சம்பளத்தில் தொழில்வரிபிடித்தம் செய்ததற்கான ரசீது தரவேண்டும், தேயிலைத் தோட்டங்களில் பல்வேறு இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் தோல்வி யாதி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளும் வருகிறது.
எனவே இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடுதலாக கூலி வழங்கவேண்டும். தொழிலாளர்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் கடந்த வாரம் வேலை நிறுத்தம் செய்தனர்.
பின்னர் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதி நிதிகள், தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் வார்டு கவுன்சிலர் ஆகியோர் இது குறித்து எஸ்டேட் நிர்வாகத்திடமும் தொழிலாளர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் எஸ்டேட் நிர்வாகம் எந்த வித உடன்பாட்டிற்கும் வரவில்லை. மேலும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மீது எஸ்டேட் அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து எஸ்டேட் மேலாளரை பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக வால்பாறை போலீசில் எஸ்டேட் நிர்வாகத்தினர் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரையும் திரும்ப பெறவேண்டும்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் வேலையையும் கெடுக்காமல் தொழிலும் பாதிக்காமல் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் எஸ்டேட் தோட்ட அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் போடும் போராட்டத்தை செய்துவருகின்றனர்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நேற்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர். இந்த தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment