Sunday, September 21, 2014
திருப்பூர் மாவட்ட ஊராட்சி 11–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 18–ந்தேதி நடைபெற்றது. இதற்காக குண்டடம் ஒன்றியத்தில் 12 ஊராட்சிகளும், தாராபுரம் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளிலும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்தனர். குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் மொத்தம் 26 ஆயிரத்து 840 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 17 ஆயிரத்து 544 வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். இது 65 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.
56 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வாக்குகள் எண்ணுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment