Tuesday, September 09, 2014
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே செவிலியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 4,500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், பணி மூப்பு அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாவதி தலைமை தாங்கினார். தலைவர் அறிவுக்கண் மற்றும் பொருளாளர் கனகலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 400 செவிலியர்கள் கலந்துகொண்டனர். செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து அரசு செவிலியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, நாங்கள் எங்களுடைய கோரிக்கைகளை பல்வேறு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். முதல்-அமைச்சர் ஜெயலலிதா எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வருகிற 15-ந் தேதி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 5 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்துவிட்டு கோட்டை நோக்கி பேரணியாக சென்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுப்பதற்கு முடிவெடுத்துள்ளோம் என்றனர்.
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 4,500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், பணி மூப்பு அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாவதி தலைமை தாங்கினார். தலைவர் அறிவுக்கண் மற்றும் பொருளாளர் கனகலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 400 செவிலியர்கள் கலந்துகொண்டனர். செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து அரசு செவிலியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, நாங்கள் எங்களுடைய கோரிக்கைகளை பல்வேறு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். முதல்-அமைச்சர் ஜெயலலிதா எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வருகிற 15-ந் தேதி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 5 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்துவிட்டு கோட்டை நோக்கி பேரணியாக சென்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுப்பதற்கு முடிவெடுத்துள்ளோம் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...

0 comments:
Post a Comment