Tuesday, September 09, 2014
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே செவிலியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 4,500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், பணி மூப்பு அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாவதி தலைமை தாங்கினார். தலைவர் அறிவுக்கண் மற்றும் பொருளாளர் கனகலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 400 செவிலியர்கள் கலந்துகொண்டனர். செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து அரசு செவிலியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, நாங்கள் எங்களுடைய கோரிக்கைகளை பல்வேறு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். முதல்-அமைச்சர் ஜெயலலிதா எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வருகிற 15-ந் தேதி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 5 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்துவிட்டு கோட்டை நோக்கி பேரணியாக சென்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுப்பதற்கு முடிவெடுத்துள்ளோம் என்றனர்.
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 4,500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், பணி மூப்பு அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாவதி தலைமை தாங்கினார். தலைவர் அறிவுக்கண் மற்றும் பொருளாளர் கனகலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 400 செவிலியர்கள் கலந்துகொண்டனர். செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து அரசு செவிலியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, நாங்கள் எங்களுடைய கோரிக்கைகளை பல்வேறு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். முதல்-அமைச்சர் ஜெயலலிதா எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வருகிற 15-ந் தேதி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 5 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்துவிட்டு கோட்டை நோக்கி பேரணியாக சென்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுப்பதற்கு முடிவெடுத்துள்ளோம் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....

0 comments:
Post a Comment