Saturday, October 04, 2014
திருப்பூர் வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பெருமாநல்லூர் ரோட்டில் உள்ள பாண்டியன் நகரில் மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்டு வரவும், ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அமைதியான முறையில் அறவழியிலும், அண்ணா தி.மு.க.மற்றும் பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பூலுவபட்டி எம்.பாலு தலைமையில்
உண்ணாவிரதம் இருந்தனர், இந்த நிகழ்ச்சிகளில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.பழனிசாமி உள்ளிட்டவர் கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment