Monday, December 29, 2014
சமையல் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக வெள்ளக்காவில் ஒன்றிய, நகர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒன்றியத் தலைவர் என்.தங்கவேல் தலைமை வகித்தார். நகரத் தலைவர் பி.எஸ்.மணியன்,ஒன்றிய பொதுச்செயலாளர் எஸ்.செந்தில்குமார், நிர்வாகி எம்.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.
இதில்,பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையத்துக்கு இரவு நேரத்தில் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளக்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டாரம் உருவாக்க வேண்டும்.
வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும். வெள்ளக்கோவில் பகுதியில் சமையல் எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள், மத்திய அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் எரிவாயு உருளை ஒன்றுக்கு ரூ.21 கூடுதலாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றனர்.
இது தொடர்ந்தால் பொதுமக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மூத்தோர் அணி நாராயணசாமி, நகரச் செயலாளர் கார்த்திகேயன், ராபர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி...
0 comments:
Post a Comment