Sunday, December 28, 2014
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எள் ஆகிய வேளாண் விளைபொருட்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று காலை நடைபெற்ற ஏலத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகளின் 28 ஆயிரத்து 622 தேங்காய்கள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இந்த தேங்காய்கள் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ.26.80–க்கும், குறைந்தபட்சமாக 1 கிலோ ரூ.16.80–க்கும் ஏலம் விடப்பட்டது.
மேலும் 39 மூடைகள் கொப்பரை தேங்காய்களுக்கு டெண்டர் கோரப்பட்டதில் அதிகபட்சமாக 1 கிலோ ரூ.101.15–க்கும், குறைந்தபட்சமாக 1 கிலோ ரூ.60.15–க்கும் ஏலம் விடப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொப்பரை தேங்காய்களுக்கு ரூ.6.05 வரை கூடுதலாக விலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலங்களில் கரூர், கருமாண்டம்பாளையம், நடுப்பாளையம், சிவகிரி, காங்கயம், முத்தூர் பகுதிகளை சேர்ந்த மொத்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 12.9.16 திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தலைமையகம் முற்றுகை போரட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது திருச்சிய...
-
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக இருந்த கே.ராஜபாண்டியன் கடந்த 2013–ம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அ....
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...

0 comments:
Post a Comment