Sunday, December 28, 2014
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எள் ஆகிய வேளாண் விளைபொருட்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று காலை நடைபெற்ற ஏலத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகளின் 28 ஆயிரத்து 622 தேங்காய்கள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இந்த தேங்காய்கள் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ.26.80–க்கும், குறைந்தபட்சமாக 1 கிலோ ரூ.16.80–க்கும் ஏலம் விடப்பட்டது.
மேலும் 39 மூடைகள் கொப்பரை தேங்காய்களுக்கு டெண்டர் கோரப்பட்டதில் அதிகபட்சமாக 1 கிலோ ரூ.101.15–க்கும், குறைந்தபட்சமாக 1 கிலோ ரூ.60.15–க்கும் ஏலம் விடப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொப்பரை தேங்காய்களுக்கு ரூ.6.05 வரை கூடுதலாக விலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலங்களில் கரூர், கருமாண்டம்பாளையம், நடுப்பாளையம், சிவகிரி, காங்கயம், முத்தூர் பகுதிகளை சேர்ந்த மொத்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி...

0 comments:
Post a Comment