Thursday, April 02, 2015
தென் தமிழகத்தில் பெரிய ரெயில் நிலையமாக இருப்பது மதுரை ரெயில் நிலையம். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் மதுரை சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால் வெளிநாட்டு பயணிகளும், யாத்திரிகர்களும் தினசரி ரெயில் மூலம் வந்த வண்ணம் உள்ளனர். இதேபோல் பல்வேறு ஊர்களுக்கு மதுரையில் இருந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை பயணிகளின் நீண்டநாள் கனவான எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) வசதி கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது. தற்போது மொத்தம் உள்ள 6 பிளாட் பாரங்களில் 2, 3 மற்றும் 6–வது பிளாட் பாரங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது.
அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் முதலாவது பிளாட்பாரம் மற்றும் 4–வது 5–வது பிளாட் பாரங்களில் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தப்படவில்லை. 4–வது மற்றும் 5–வது பிளாட்பாரத்திலிருந்தான் ராமேசுவரத்திற்கு செல்லும் ரெயில்களும், ராமேசுவரத்திலிருந்து வரும் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரத்திற்கு செல்வோரில் முதியோர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மிக அதிக அளவில் உள்ளனர். மேலும் செங்கோட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் பெரும்பான்மையான நேரங்களில் பிளாட்பாரம் 4 மற்றும் 5 லிருந்து தான் இயக்கப்படுகிறது.
எனவே 4 மற்றும் 5–வது பிளாட்பாரத்தில் உடனடியாக எஸ்கலேட்டர் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நிற்கும் தொலைதூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இருந்து இறங்கி 2 மற்றும் 3–வது பிளாட்பாரம், 4 மற்றும் 5–வது பிளாட் பாரம் மற்றும் 6–வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் ரெயிலில் மாறி பயணம் செய்ய செல்வோர் முதலாவது பிளாட்பாரத்தில் எஸ்கலேட்டர் வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர்.
ஆகவே முதலாவது பிளாட்பாரத்தில் பயணிகள் ஏறி செல்வதற்கு மட்டுமாவது உடனடியாக எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment