Thursday, December 03, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 60மிமீ மழை பெய்துள்ளது
இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): கோவில்பட்டி 56, விளாத்திகுளம் 47, குலசேகரன்பட்டினம் 45, காடல்குடி 34, காயல்பட்டினம் 25, திருச்செந்தூர் 23, சூரங்குடி 23, கழுகுமலை 23, தூத்துக்குடி 14, என மாவட்டத்தில் மொத்தம் 396 மிமீ மழை பெய்துள்ளது.
தற்போது பெய்த பலத்த மழையால் கோவில்பட்டி பகுதிகளில் விளை நிலத்துக்குள் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்தன. கழுகுமலை அருகே கரடிகுளத்தில் மானாவாரி பயிர்கள் சேதமடைந்துள்ளன. இப்பகுதியில் 4 விவசாயிகளுக்குச் சொந்தமான 2.16 ஹெக்டரில் பயிரிடப்பட்டிருந்த பாசி, உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கின.
கடம்பூர் அருகே குருமலை பகுதியில் ராஜன்குளம் கண்மாய் தென்புறம் கரை உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதன் அருகேயுள்ள புஞ்சை மற்றும் நஞ்சை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. அரசங்குளம் அயன்குளம் கண்மாய் அருகேயுள்ள 7 விவசாயிகளுக்குச் சொந்தமான 4.50 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களும் சேதமடைந்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
0 comments:
Post a Comment