Thursday, January 21, 2016
திருச்செந்தூர் பகுதியில் 2 குழந்தைகளிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் கீழவெயிலு கந்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன் (37). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக தனது கைக்குழந்தையுடன் சென்றார். கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் சிறுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை திருடியுள்ளான். குழந்தையின் கழுத்தில் கிடந்த நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கந்தன் திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் மதுரை நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (32). இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்தார். தனது கைக்குழந்தையுடன் ஜெயபால் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது குழந்தையின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை மர்ம நபர் அபேஸ் செய்து விட்டு தப்பி விட்டான். இதுகுறித்து ஜெயபால் திருச்செந்தூர் கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பொருட்கள், நகைகள், குழந்தைகள் காணாமல் போவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை காவல்துறையினர் முறையாக கண்காணிப்பில் ஈடுபடாமல் மெத்தனம் காட்டி வருவதால் பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி கும்பிட மிரண்டு போய் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...
0 comments:
Post a Comment