Monday, September 05, 2016
On Monday, September 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 5.9.16 சபரிநாதன் 9443086297
திருச்சி தாயுமானவர் சன்னதி மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியன்று 150 கிலோ கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மாணிக்கவிநாயகர் சன்னதிகளில் தலா75 கிலோ வீதம் 150 கிலோ கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்பட்டது.
பிரதி விநாயகர் சதுர்த்தி அன்று காலை 9மணி முதல் 10.30 மணிக்குள் உச்சிபிள்ளையார் மாணிக்க விநாயகர் சன்னதிகளில் தலா75 கிலோ வீதத்தில் பிரம்மாண்டமாக தயாரிக்;கப்பட்டு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் கருவறை விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும்.
பலகணபதி நாகபரணகணபதி லட்சுமி தர்பார் பஞ்சமுகம் மூஷிக ராஜ மயூர குமார வல்லபரிஷபாருடர் சித்திபுத்தி நடன கணபதி என ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு விநாயகருக்கு பூஜைகள் நடைபெறும் 13ம் திருநாளான செப்டம்பர் 17ம் தேதி 27 வகையான பொருள்களைக் கொண்டு விநாயகருக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.
வுpநாயகர் சதுர்த்தி திருநாளில் உலக நன்மை வேண்டியும் மாணவ மாணவிகள் உயர்கல்வி பெறவும் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விநாயகர் சன்னதி எதிரில் பக்தர்கள் 1லட்சத்து எட்டு தோப்புக்கரணம் போடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.தண்ணீர் அமைப்பினர் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என்பதனை வலியுறுத்தி துணி பைகளை மக்களுக்கு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
பேட்டி ......... தாமஸ்