Thursday, December 15, 2016
உடுமலை,உடுமலை நகரில் போக்குவரத்து நிறைந்த பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து சத்திரம் வீதிக்கு செல்லும் இடத்தில் பொள்ளாச்சி சாலை சந்திப்பு பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாயில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி, சாலையில் ஓடும் அவல நிலை உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர். சாக்கடை கால்வாய் அடைப்பை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருப்பூர்,இந்தியாவில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ஆளும்கட்சி ஆதரவோடு இருக்கிறார்கள் என்று திருப்பூரில் தா.பாண்டியன் கூறினார்.கருத்தரங்கம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் யுகப்புரட்சியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் திருப்பூர் மங்கலம் ரோடு கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கருத்தரங்குக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன், மாநில துணை செயலாளர் சுப்பராயன், மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுவுடைமை குறித்து பேசினார்கள்.கருத்தரங்கம் முடிந்ததும் தா.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–பயிர்கள் கருகி விட்டது
தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழையால் கிராமம், நகரங்களில் குடிநீருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன. எனவே கையில் இருந்ததையும் இழந்ததன் காரணமாக கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். எனவே விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முன்கூட்டியே திட்டமிட வேண்டிய பொறுப்பு புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு உள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டாலும், பயிர்கள் கருகி போனாலும் மத்திய அரசு ஒரு குழுவை அனுப்புகிறோம் என்பார்கள். அவர்கள் பார்வையிட்டு சென்று விடுவாடுவார்கள். அதன்பிறகு அவர்கள் அறிக்கை கொடுப்பார்கள். அதில் எவ்வளவு நிவாரணம் வந்தது என்பதெல்லாம் தெரியாது. இது வாடிக்கையாகி விட்டது. எனவே மத்திய அரசு இந்த குழுக்களை நியமிப்பது என வாடிக்கையான மழுப்பல் வேலைகளை செய்யாமல், வறட்சியை எதிர்கொள்வதற்கு மத்திய அரசும், மாநில அரசும் முழு மூச்சாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாய கடன்கள்
முதல் நடவடிக்கையாக விவசாயிகளிடம் ஒரு வருடத்துக்கு விவசாய கடன்களை வசூலிக்க கூடாது. இதற்கான அறிவிப்பை அரசு உடனே வெளியிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தும் இயக்கங்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி உடனடியாக தொடங்கும்.கருப்பு பணம்
கருப்பு பணம் வேட்டையாடுவதில் பிரதமர் மோடி இறங்கி உள்ளார். இந்தியாவில் மக்கள் படும் துயரத்தை பார்த்தால் அவர் அறிவித்த அறிவிப்பின் லட்சியத்தை அவர் அடையப்போவதில்லை. புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். களில் கிடைப்பதில்லை. ஆனால், தனியாரிடம் ரூ.100 கோடி, ரூ.200 கோடி பிடிபட்டு இருக்கிறது என்றால் அரசாங்கத்தால் அச்சிடப்படும் பணம், ரிசர்வ் வங்கியால் வினியோகிக்கப்படும் பணம் எப்படி தனியாருக்கு கிடைத்தது என்பதை மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ஆளும்கட்சி அரவணைப்போடு, ஆதரவோடு இருக்கிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. கருப்பு பணம் வைத்து இருப்பவர்களை கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் மக்களை இப்படி வாட்டி வதைக்கக்கூடாது.ஒத்துழைக்க வேண்டும்
மத்திய அரசு என்பது ஜனநாயகத்தின் பெயரால் சர்வாதிகார புகுத்துதலை மாநில அரசுகளிடம் செய்து வருகிறது. மாநில அரசின் உரிமைகளை பாதுகாப்பதில் அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
குண்டடம் குண்டடம் பகுதியில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளப்பயிர்கள் வேருடன் சாய்ந்தன.சூறாவளி காற்று
சென்னையில் நேற்று முன்தினம் கரையை கடந்த வார்தா புயல் சென்னையை புரட்டிப்போட்டது. அதே நேரம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. அதேபோல் குண்டடம் பகுதியிலும் பனித்துளிகளைப் போன்ற சாரல் பெய்தது. அப்போது பயங்கர சூறாவளிக்காற்று வீசியது.இந்தக் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மேட்டுக்கடை, முத்துக்கவுண்டம்பாளையம், சந்திராபுரம், நந்தவனம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது கதிர் தள்ளிய நிலையில் இருந்த மக்காச் சோளப்பயிர்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது மட்டுமின்றி இந்த போகமே வீணாகிப் போனதாக கவலை தெரிவிக்கின்றனர். மேலும் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன.இது குறித்து தும்பலப்பட்டியை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது:–இழப்பீடு வழங்க வேண்டும்
இந்த போகத்தில் 2 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்திருந்தேன். மழை பொய்த்துப் போய் ஓரளவுதான் விளைந்திருந்தது. இந்த நிலையில் சூறாவளிக்காற்றால் மொத்த மக்காச்சோள பயிரும் சாய்ந்து விட்டன. இதனால் சுமார் ரூ.1.20 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டடம் பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மக்காச்சோளம் சாய்ந்து விட்டன.
முத்தூர், நத்தக்காடையூரில் இருந்து பழையகோட்டை ஊராட்சி புதுவெங்கரையாம்பாளையம் வழியாக ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் செல்வதற்கு தார்ச்சாலை உள்ளது. இந்த தார்ச்சாலையின் குறுக்கே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் இரண்டு புறமும் தடுப்பு சுவர் இன்றி உள்ளது. இதனால் இந்த பாலம் வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த தரைப்பாலம் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் பலத்த மழை பெய்தால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர் இந்த தரைப்பாலத்தை மூழ்கிக்கொண்டு மேலே செல்லும். அப்போது இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். அதற்கு மாற்றாக நத்தக்காடையூரில் இருந்து முத்தூர் சென்று அங்கிருந்து தாண்டாம்பாளையம் செல்ல வேண்டியுள்ளது. எனவே நொய்யல் ஆற்று தரைப்பாலத்தை சீரமைத்தும், பாலத்தின் இரண்டு புறமும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் குடியிருந்து கல் உடைக்கும் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. வறுமையில் இருக்கும் இந்த தம்பதியினருக்கு குழந்தையை பார்த்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து தம்பதியினருக்கு தெரிந்த ஒரு நபர் மூலம் கரூரை சேர்ந்த குழந்தையில்லாத மற்றொரு தம்பதிக்கு, குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு வந்தது. இந்த தகவலை அடுத்து குழந்தையின் பெற்றோரையும், குழந்தையை விலைக்கு தத்தெடுத்ததாக கூறப்படும் தம்பதியினரையும் அழைத்து அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், வறுமையின் காரணமாக தெரிந்த நபர் மூலம் கரூரில் உள்ள ஒரு தம்பதிக்கு குழந்தையை கொடுத்ததாகவும், தற்போது குழந்தையை தாங்களே வளர்க்க தயாராக இருப்பதாகவும் குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரிக்கும் விதமாக, இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அங்குள்ள அதிகாரிகள் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்று திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் அந்த பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இவருக்கு அவினாசி ரோட்டில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியின் எஸ்எஸ்ஐ கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி மாலை ஜீவானந்தத்தின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசிய பெண் “ பாங்க் ஆப் பரோடவில் இருந்து பேசுவதாகவும் உங்களுடைய ஏ.டி.எம். எண் காலாவதியாகி விட்டதாகவும், ஏ.டி.எம். கார்டு எண்ணின் கடைசி 4 இலக்க எண்ணை தெரிவிக்குமாறு உள்ளார்.
இதை நம்பி ஜீவானந்தமும் அந்த பெண்ணிடம் 4 இலக்க எண்ணை கூறி விட்டார். அந்த பெண் செல்போன் இணைப்பை துண்டித்த 10 நிமிடத்தில் ஜீவானந்தத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரத்து 500 பணம் குறைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவானந்தம் இதுதொடர்பாக வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்பது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
மேலும் ஜீவானந்தத்தின் ஏ.டி.எம். கார்டு எண்ணை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் அதை பயன்படுத்தி அவருடைய வங்கி கணக்கில் இருந்த பணத்தை மோசடி செய்து அந்த பணம் மூலமாக ஆன்லைனில் பொருட்கள் வாங்கியதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஜீவானந்தம் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களுடைய செல்போனுக்கு வரும் அழைப்புகளில் எதிர்முனையில் பேசும் நபர்கள் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி ஏ.டி.எம். எண்ணை வாங்கி வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று போலீசார் அந்த செய்தி குறிப்பில் கூறி உள்ளனர்
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கியில் செல்லாத நோட்டுகளைத்தான் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் அதிகமாக செலுத்தி வருகிறார்கள். வங்கியில் பெற்றுச்செல்லும், புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகள் மீண்டும் வங்கிக்கு வருவதில்லை. இதனால் வங்கி நிர்வாகம் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பணத்தை வழங்க முடியாமல் தவித்து வருகின்றன.
அதே நேரம் திருப்பூரில் உள்ள வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியில் இருந்து போதிய அளவு பணம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வங்கிகளில் தினமும் வரும் பணத்தை பொறுத்து வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கி, ரூ.4 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரை வினியோகம் செய்து வருகின்றன.
வங்கிகளில் நீண்ட வரிசை
இதன்காரணமாக தினமும் வங்கிகள் முன்பு காலை 7 மணி முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்க தொடங்கி விடுகின்றனர். காலை 10 மணிக்கு வங்கி திறக்கும் நேரத்தில் ஒரு வங்கியில் குறைந்தது 300 முதல் 500 பேருக்கு மேல் திரண்டு விடுகிறார்கள்.
பிரச்சினையை சமாளிப்பதற்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு டோக்கன் வழங்கி வருகிறார்கள். சில வங்கிகளில் 400-க்கும் மேற்பட்டோர் இருந்தாலும் தங்கள் வங்கியில் உள்ள பணம் கையிருப்பை பொருத்து 200 முதல் 300 டோக்கன்களை மட்டுமே வழங்குகின்றன. ஆனால் வரிசையில் நின்று டோக்கன் கிடைக்காத பொதுமக்கள், தங்களுக்கும் டோக்கன் வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொதுமக்கள் சாலைமறியல்
இந்த நிலையில் திருப்பூர்-மங்கலம் ரோட்டில் டைமண்ட் தியேட்டர் அருகே உள்ள ஒரு வங்கியில் நேற்று காலை 500-க்கும் மேற்பட்டோர் பணம் எடுப்பதற்காக திரண்டு நின்றனர். ஆனால் வங்கி நிர்வாகம் 300 பேருக்கு மட்டுமே பணம் கொடுக்க டோக்கன் வழங்கியது. இதனால் டோக்கன் கிடைக்காதவர்கள், வங்கி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் வங்கி முன்பு சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து சாலைமறியலை கைவிடச்செய்தனர். பின்னர், டோக்கன் கிடைக்காத பொதுமக்கள் அனைவரும் வங்கியை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து வங்கி நிர்வாகம், மீதம் உள்ளவர்களுக்கு டோக்கன் வழங்குவதாகவும், ஆனால் அவர்களுக்கு நாளை(இன்று) தான் பணம் வழங்க முடியும் என்றும், நாளை யாருக்கும் டோக்கன் வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார்கள்.
இதை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, வங்கி நிர்வாகம் அவர்களுக்கு டோக்கன் வழங்கியது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...