Tuesday, March 31, 2020
On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 31
வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கூலித் தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் கல்லூரி மாணவர்கள் பலர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பயின்று வருகின்றனர்.ஊரடங்கு உத்தரவு காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லாததால் இவர்களும் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூலித்தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பணமின்றி கஷ்டப்படும் சூழலில், வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.தற்போது, வீட்டு உரிமையாளர்கள் மார்ச் மாதத்திற்கான வாடகையைக் கேட்டு நெருக்கடி கொடுக்கலாம் என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி சரக காவல்துறை, டிஐஜி பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாடகை வீடுகளில் தங்கியுள்ள மாணவர்கள், தமிழ்நாடு, வெளிமாநில தொழிலாளர்கள் என யாரிடமும் வீட்டினை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் வலியுறுத்தக் கூடாது. ஒரு மாத காலத்துக்கு வாடகையும் கேட்கக்கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இதனை மீறி வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுத்தால் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கூலித் தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் கல்லூரி மாணவர்கள் பலர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பயின்று வருகின்றனர்.ஊரடங்கு உத்தரவு காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லாததால் இவர்களும் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூலித்தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பணமின்றி கஷ்டப்படும் சூழலில், வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.தற்போது, வீட்டு உரிமையாளர்கள் மார்ச் மாதத்திற்கான வாடகையைக் கேட்டு நெருக்கடி கொடுக்கலாம் என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி சரக காவல்துறை, டிஐஜி பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாடகை வீடுகளில் தங்கியுள்ள மாணவர்கள், தமிழ்நாடு, வெளிமாநில தொழிலாளர்கள் என யாரிடமும் வீட்டினை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் வலியுறுத்தக் கூடாது. ஒரு மாத காலத்துக்கு வாடகையும் கேட்கக்கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இதனை மீறி வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுத்தால் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...

0 comments:
Post a Comment