Monday, June 01, 2020
On Monday, June 01, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மணப்பாறையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய மின்ஊழியர்களின் எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிப்பதை முன்னிட்டு மின்வாரிய ஊழியர்கள் அனைத்து மின்வாரிய அலுவலகங்களின் முன்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மின் துறையை தனியார் மயமாக்க கூடாது. 2020 மின்சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் தொழிலாளரின் உரிமையை பறிக்கக்கூடாது, மின் வாரியங்கள் பிரிக்கக் கூடாது, விவசாயம், குடிசை, நெசவு போன்றவைகளுக்கு சமூக அக்கறையுடன் செயல்படுத்தி வரும் மானிய திட்டங்களை வழங்கி வரும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment