Showing posts with label இஸ்லாமாபாத். Show all posts
Showing posts with label இஸ்லாமாபாத். Show all posts
Sunday, October 19, 2014
அந்நாட்டு சட்டத்தின்படி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்களது சொத்துமதிப்பை ஒவ்வொரு ஆண்டும் தெரிவிக்க வேண்டும். இந்த ஆண்டு சொத்துமதிப்பை தெரிவிக்க உறுப்பினர்களுக்கு கூடுதலாக 15 நாட்கள் தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்திருந்தது. தேர்தல் ஆணையம் உறுப்பினர்கள் சொத்து மதிப்பை தெரிவிக்க அக்டோபர் 15-ம் தேதியை இறுதி நாளாக அறிவித்தது. ஆனால் 210 உறுப்பினர்கள் தங்களது சொத்து மற்றும் பொறுப்புக்களை தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து தாக்கல் செய்யாத நபர்களை பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் கலந்துக் கொள்ள முடியாத வண்ணம் தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. எனினும், உறுப்பினர்கள் தங்களது கடமையை நிறைவேற்றும் போது அவர்கள் உறுப்பினராக செயல்பட முடியும். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பிரதமர் நவாஸ் செரீப்பின், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
