Tuesday, December 20, 2016

On Tuesday, December 20, 2016 by Tamilnewstv in    
திருச்சி 20.12.16
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் திருச்சியில் உள்ள 111 வங்கி கிளைகளின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
அதில் பேசிய காவல்துறை ஆணையர் மஞ்சுநாதா மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டுமென்றும் அலைபேசியின் மூலமாக வரும் அழைப்புகளில் வங்கி ஏடிஎம் பின் நம்பர்கள் தெரியப்படுத்தக்கூடாது அதன் வாயிலாக பணம் கையகப்படுத்தப்படும் குற்றச்செயல்கள் நடைபெறவாய்ப்புகள் என்றும் அதை போன்று ஏடிஎம் மையங்களிலில் வேறுநபர்களுக்கு தெரியும் வண்ணம் பின் நம்பர்களை கையாளக்கூடாது என்றும் தெரிவித்தார்.அதே போன்று மத்த்p அரசு சட்டதிட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைக்கவேண்டும் என்றும் வங்கிகளுக்கு உரிய பாதுகாப்புகள் அளிக்கபட்டுவருகிறது என்றார்.மேலும் வெளிமாநில லாட்டரி விற்ப்பவர்களுக்கு அதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து கூறினார்.


பேட்டி மாநகர காவல்துறை ஆணையர் மஞ்சுநாதா
On Tuesday, December 20, 2016 by Tamilnewstv in    

On Tuesday, December 20, 2016 by Tamilnewstv in    

Friday, December 16, 2016

On Friday, December 16, 2016 by Unknown in    






திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் இரவு 11.10 மணியளவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவக் குறிப்பில், "திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டையிலும், நுரையீரலிலும் தொற்று ஏற்பட்டுள்ளது. சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோய்த் தொற்றை சீர்செய்வதற்கான சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. மருத்துவக் குழு ஒன்று அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மருந்து ஒவ்வாமையால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 7-ம் தேதி இரவு வீடு திரும்பினார்.
தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர் உடல்நலக் குறைவால் கடந்த 40 நாட்களாக கருணாநிதி எவ்வித பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் ஓய்வில் இருப்பதால் யாரும் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என கட்சி சார்பிலும் அறிக்கை விடப்பட்டிருந்தது.
On Friday, December 16, 2016 by Unknown in    
திருப்பூர்,
சாமளாபுரத்தில் 35 குடியிருப்புகளை காலி செய்ய நெடுஞ்சாலைத்துறை நோட்டீசு வழங்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாதிருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட சாமளாபுரம் 1–வது வார்டு கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை தலைவர் பவுத்தன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–
கருப்பராயன் கோவில் வீதியில் 1 ஏக்கர் 85 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் 50 சென்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த 35 குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். நாங்கள் குடியிருக்கும் இடத்துக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுத்து முறையிட்டோம்.
காலி செய்ய நோட்டீசுபொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் நாங்கள் குடியிருப்பதாகவும், அவர்கள் தடையின்மை சான்று கொடுத்ததும் பட்டா வழங்குவதாக தெரிவித்தார்கள். சாமளாபுரம் பேரூராட்சியிலும் எங்களுக்கு பட்டா வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றிக்கொடுத்தார்கள். ஆனால் இதுவரை பட்டா எங்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பல்லடம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் இருந்து எங்களுடைய வீடுகளை காலி செய்யுமாறு கடந்த 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு நோட்டீசு கொடுத்தார்கள். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ள நிலையில், எங்களுடைய 35 வீடுகள் உள்பட 59 பேரின் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மற்றொரு அறிவிப்பு நோட்டீசும் கொடுத்துள்ளனர். இதில் இன்னும் 7 நாட்களில் வீடுகளை காலி செய்யுமாறு அறிவித்துள்ளனர். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இல்லையென்றால் மாற்று இடம் வழங்கி உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கலெக்டரை சந்தித்தனர்இதைத்தொடர்ந்து கலெக்டர் எஸ்.ஜெயந்தியை சந்தித்து முறையிட்டனர். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் விவரம் கேட்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்
On Friday, December 16, 2016 by Unknown in    
தாராபுரம்,
கோவை அருகே கார் விபத்தில் தம்பதி பலியான வழக்கில் அவரின் குடும்பத்திற்கு, இழப்பீடாக ரூ.1 கோடியே 55 லட்சத்து 43 ஆயிரத்து 361 காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என தாராபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவன மேலாளர் மனைவியுடன் பலிகோவை அருகே உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகராஜ் (வயது 48). இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பரமேஸ்வரி (43) இவரும் அதே நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஆனந்தி என்ற மகளும், ரஞ்சித்குமார் என்கிற மகனும் உள்ளனர்.
கடந்த 14.4.2014 அன்று கணவன்–மனைவி இருவரும் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமிகும்பிட காரில் சென்றனர். காரை முருகராஜ் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கோவை செட்டிபாளையம் சின்னக்களிமேடு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே பல்லடத்திலிருந்து செட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று, முருகராஜ் ஓட்டி சென்ற கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த முருகராஜ் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.1½ கோடி இழப்பீடுகார் விபத்தில் பலியான முருகராஜின் மகள் ஆனந்தியும், மகன் ரஞ்சித்குமாரும் சேர்ந்து, தங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தருமாறு, தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணப்பெருமாள், கார் விபத்தில் முருகராஜியின் குடும்பதிற்கு ரூ. 1 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 513–ம், அவரது மனைவி பரமேஸ்வரிக்கு ரூ. 34 லட்சத்து 33 ஆயிரத்து 848–ம் என ஆகமொத்தம் ரூ.1 கோடியே 55 லட்சத்து 43 ஆயிரத்து 361 இழப்பீடாக காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், இந்த விபத்து வழக்கு பதிவான நாளிலிருந்து, நிவாரணத் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டித் தொகையை சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்
On Friday, December 16, 2016 by Unknown in    
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வக பரிசோதனையாளர்களை அவசியம் பணியமர்த்தியிருக்க வேண்டும் என்று கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள்உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் சார்பில் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு பற்றிய ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கி பேசியதாவது:–
குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைக்கு அருகிலும், குடியிருப்பு பகுதிகளுடனும் நேரடி தொடர்பு இருக்கும் வகையிலும் அமைய கூடாது. குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தின் நுழைவாயில் தொற்று நீக்கம் செய்யும் வகையில் அமைக்கப்பட வேண்டும். குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தின் தரைத்தளம், மேற்கூரை மற்றும் சுவர்கள் நல்ல நிலையில் பராமரிக்க வேண்டும்.
ஆய்வுக்கூடம்தரை பகுதிகளை எளிதில் சுத்தம்செய்வதற்கு ஏற்ப கழிவுநீர் வாய்க்கால் இருக்க வேண்டும். ஜன்னல்களில் பூச்சிகள் நுழையாமல் இருக்க தடுப்பு வலைகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். போதுமான இடவசதியுடன் வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும். குடிநீர் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் சாதனங்களும் மற்றும் கொள்கலன்களும் துருப்பிடிக்காமலும் தொற்று நீக்கம் செய்யும் வகையிலும் இருக்க வேண்டும்.
குடிநீர் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடாது. பணியாளர்கள் பணியை தொடங்கும் முன்பு தலைக்கவசம், கையுறை மற்றும் மேலங்கி ஆகியவற்றை அணிந்திருக்க வேண்டும். உற்பத்தி செய்யப்படும் குடிநீரை சேமித்து வைக்கவும், பொட்டலமிடவும், வினியோகம் செய்யவும் தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி நுண்ணுயிரியல் மற்றும் ரசாயன பகுப்பாய்வுகளை செய்வதற்கேற்ப ஆய்வுக்கூடம் வளாகத்தின் உட்பகுதியில் இருக்க வேண்டும். ஆய்வக பரிசோதனையாளர்களை அவசியம் பணியில் அமர்த்தியிருக்க வேண்டும்.
உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்தயாரிக்கப்பட்ட குடிநீர் உரியமுறையில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு மூடி உறையைக்கொண்டு சீல் வைக்கப்பட்டிருக்க வேண்டும். வினியோகிக்கப்படும் குடிநீர் பாட்டில்களின் எண்ணிக்கை, தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, பேட்ச் எண், ஆய்வக பரிசோதனை விவரம் மற்றும் வினியோகிக்கப்படும் நாள் முதலியவற்றை பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். அனைத்து குடிநீர் நிறுவனங்கள் உரிமத்தை உரிய காலத்துக்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் எஸ்.ஜெயந்தி கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட நியமன அதிகாரி (உணவு பாதுகாப்புத்துறை) தமிழ்ச்செல்வன் மற்றும் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்
On Friday, December 16, 2016 by Unknown in    
அவினாசியில் கியாஸ் குடோன் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கியாஸ் குடோன் கட்ட எதிர்ப்பு
அவினாசி மடத்துப்பாளையம் சாலையில் தனியார் ஒருவர் சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டி வருகிறார். குடியிருப்புகள் அதிகம் உள்ளதாலும், பள்ளி, கோவில் இருப்பதாலும் அந்த பகுதியில் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு பரமசாமியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதன் பின்னரும் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு திருப்பூர் மாவட்ட கலெக்டெர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனுகொடுத்தனர். இதற்கிடையில் தலித் விடுதலை கட்சியின் சார்பில் மடத்துப்பாளையம் ரோட்டில் குடியிருப்புகள் உள்ள இடத்தில் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்ட அனுமதிக்கக்கூடாது என அவினாசி தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
முற்றுகை
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று குடோன் கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது. அப்போது அந்த பகுதி மக்கள் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இருப்பினம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் சென்றனர்.
அங்கு செயல் அலுவலர், மற்றும் அலுவலர்கள் யாரும் இல்லாததால் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் நீண்ட நேரமாகியும் பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் விரக்தியுடன் பொதுமக்கள் கலைந்துசென்றனர். கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டும் பிரச்சினை தொடர் கதையாக உள்ளதால் அவினாசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
On Friday, December 16, 2016 by Unknown in    
திருப்பூர்,
திருப்பூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதப்படை போலீஸ்காரர் தொலைபேசி கம்பத்தில் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
ஆயுதப்படை போலீஸ்காரர்தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராமசாமிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கனகராஜின் மகன் ஈஸ்வரன்(வயது 32). இவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி நித்யா(27). இவர்களின் மகள் தேவதர்ஷினி(1).
ஈஸ்வரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்காக சென்று இருந்தார். அங்கு பாதுகாப்பு பணி முடிந்து திருப்பூர் வந்த அவர், நேற்று முன்தினம் ஒரு நாள் விடுப்பு எடுத்துவிட்டு தனது சொந்த ஊரான தேனிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். பின்னர் நேற்று வேலைக்கு வருவதற்காக, தனது வீட்டில் இருந்து அதிகாலையில் மோட்டார்சைக்கிளில் திருப்பூருக்கு புறப்பட்டார்.
தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துகாலை 6.45 மணி அளவில் திருப்பூர்–தாராபுரம் ரோடு ஒத்தக்கடை பகுதியில் அவர் வந்து கொண்டிருந்த போது, எதிரே ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்திக்கொண்டு வந்ததாக தெரிகிறது. அந்த வாகனம் தன் மீது மோதாமல் இருக்க ஈஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரம் இறக்கினார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த சாலையோர சிறிய பள்ளத்தில் இறங்கியதுடன் அங்கிருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் ஈஸ்வரன் தூக்கி வீசப்பட்டார். அத்துடன் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்று விழுந்தது.
பரிதாப சாவுஇதனால் கீழே விழுந்த ஈஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடிக்கொண்டு இருந்தார். இதை பார்த்ததும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த திருப்பூர் ஊரக போலீசார் விரைந்து வந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அவருடைய உடல் நேற்று மதியம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முன்னதாக திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்