Friday, December 16, 2016
On Friday, December 16, 2016 by Unknown in Tiruppur
அவினாசியில் கியாஸ் குடோன் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கியாஸ் குடோன் கட்ட எதிர்ப்பு
அவினாசி மடத்துப்பாளையம் சாலையில் தனியார் ஒருவர் சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டி வருகிறார். குடியிருப்புகள் அதிகம் உள்ளதாலும், பள்ளி, கோவில் இருப்பதாலும் அந்த பகுதியில் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு பரமசாமியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதன் பின்னரும் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு திருப்பூர் மாவட்ட கலெக்டெர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனுகொடுத்தனர். இதற்கிடையில் தலித் விடுதலை கட்சியின் சார்பில் மடத்துப்பாளையம் ரோட்டில் குடியிருப்புகள் உள்ள இடத்தில் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்ட அனுமதிக்கக்கூடாது என அவினாசி தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
முற்றுகை
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று குடோன் கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது. அப்போது அந்த பகுதி மக்கள் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இருப்பினம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் சென்றனர்.
அங்கு செயல் அலுவலர், மற்றும் அலுவலர்கள் யாரும் இல்லாததால் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் நீண்ட நேரமாகியும் பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் விரக்தியுடன் பொதுமக்கள் கலைந்துசென்றனர். கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டும் பிரச்சினை தொடர் கதையாக உள்ளதால் அவினாசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment