Tuesday, February 17, 2015

மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாசி மகாசிவராத்திரியன்று விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் முக்தி கிடைக்கும் என்பது சிவ பக்தர்களது நம்பிக்கை. அதனடிப்படையிலேயே ஆண்டுதோறும் சிவாலயங்களில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு திருவோணம் சிவராத்திரியும், புதன்கிழமை மாசி அமாவாசையும் வருகின்றன. இதையடுத்து செவ்வாய் இரவு 10 மணிக்கு அம்மன் சன்னதியில் தொடங்கும் அபிஷேகம், புதன் அதிகாலை 1.30 மணிக்கு நிறைவடைகிறது. சுவாமி சன்னதியில் செவ்வாய் இரவு 11 மணிக்குத் தொடங்கும் அபிஷேகம் புதன் அதிகாலை 2.45 மணிக்கு முடிவடைகிறது.
கட்டளை அடிப்படையில் அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதில் பால், தயிர், மோர், பன்னீர், இளநீர், பழங்கள், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்கள் மூலம் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது ஓதுவார்கள் பாராயணம் பாடுவார்கள். விடிய விடிய சிவராத்திரி அபிஷேகத்தில் பங்கேற்கும் சிவாச்சாரியார்கள், பின்னர் வீடுகளுக்குச் சென்று விரதத்தை முடித்து பூஜை செய்வர்.
மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையில் நன்மை தருவார், தெற்கு மாசி வீதியில் உள்ள திருமறைநாதர், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் மற்றும் செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
சிறப்புப் பேருந்துகள்: சிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களுக்குச் செல்வர். இதையடுத்து மாட்டுத்தாவணியிலிருந்து ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருமாத்தூர் பகுதிக்கும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளுக்கும் விடிய விடிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு எல்லீஸ்நகர், பெரியார் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து ஜான்ஸிராணி பூங்கா பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நகரில் விடிய விடிய பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
மாசி மகாசிவராத்திரியன்று விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் முக்தி கிடைக்கும் என்பது சிவ பக்தர்களது நம்பிக்கை. அதனடிப்படையிலேயே ஆண்டுதோறும் சிவாலயங்களில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு திருவோணம் சிவராத்திரியும், புதன்கிழமை மாசி அமாவாசையும் வருகின்றன. இதையடுத்து செவ்வாய் இரவு 10 மணிக்கு அம்மன் சன்னதியில் தொடங்கும் அபிஷேகம், புதன் அதிகாலை 1.30 மணிக்கு நிறைவடைகிறது. சுவாமி சன்னதியில் செவ்வாய் இரவு 11 மணிக்குத் தொடங்கும் அபிஷேகம் புதன் அதிகாலை 2.45 மணிக்கு முடிவடைகிறது.
கட்டளை அடிப்படையில் அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதில் பால், தயிர், மோர், பன்னீர், இளநீர், பழங்கள், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்கள் மூலம் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது ஓதுவார்கள் பாராயணம் பாடுவார்கள். விடிய விடிய சிவராத்திரி அபிஷேகத்தில் பங்கேற்கும் சிவாச்சாரியார்கள், பின்னர் வீடுகளுக்குச் சென்று விரதத்தை முடித்து பூஜை செய்வர்.
மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையில் நன்மை தருவார், தெற்கு மாசி வீதியில் உள்ள திருமறைநாதர், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் மற்றும் செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
சிறப்புப் பேருந்துகள்: சிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களுக்குச் செல்வர். இதையடுத்து மாட்டுத்தாவணியிலிருந்து ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருமாத்தூர் பகுதிக்கும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளுக்கும் விடிய விடிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு எல்லீஸ்நகர், பெரியார் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து ஜான்ஸிராணி பூங்கா பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நகரில் விடிய விடிய பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
காமநாயக்கன்பாளையத்தில் இருந்து கரடிவாவி செல்லும் சாலையில் புளியம்பட்டி பிரிவு உள்ளது. இங்கு நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிண...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
0 comments:
Post a Comment