Tuesday, February 17, 2015

மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாசி மகாசிவராத்திரியன்று விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் முக்தி கிடைக்கும் என்பது சிவ பக்தர்களது நம்பிக்கை. அதனடிப்படையிலேயே ஆண்டுதோறும் சிவாலயங்களில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு திருவோணம் சிவராத்திரியும், புதன்கிழமை மாசி அமாவாசையும் வருகின்றன. இதையடுத்து செவ்வாய் இரவு 10 மணிக்கு அம்மன் சன்னதியில் தொடங்கும் அபிஷேகம், புதன் அதிகாலை 1.30 மணிக்கு நிறைவடைகிறது. சுவாமி சன்னதியில் செவ்வாய் இரவு 11 மணிக்குத் தொடங்கும் அபிஷேகம் புதன் அதிகாலை 2.45 மணிக்கு முடிவடைகிறது.
கட்டளை அடிப்படையில் அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதில் பால், தயிர், மோர், பன்னீர், இளநீர், பழங்கள், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்கள் மூலம் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது ஓதுவார்கள் பாராயணம் பாடுவார்கள். விடிய விடிய சிவராத்திரி அபிஷேகத்தில் பங்கேற்கும் சிவாச்சாரியார்கள், பின்னர் வீடுகளுக்குச் சென்று விரதத்தை முடித்து பூஜை செய்வர்.
மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையில் நன்மை தருவார், தெற்கு மாசி வீதியில் உள்ள திருமறைநாதர், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் மற்றும் செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
சிறப்புப் பேருந்துகள்: சிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களுக்குச் செல்வர். இதையடுத்து மாட்டுத்தாவணியிலிருந்து ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருமாத்தூர் பகுதிக்கும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளுக்கும் விடிய விடிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு எல்லீஸ்நகர், பெரியார் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து ஜான்ஸிராணி பூங்கா பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நகரில் விடிய விடிய பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
மாசி மகாசிவராத்திரியன்று விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் முக்தி கிடைக்கும் என்பது சிவ பக்தர்களது நம்பிக்கை. அதனடிப்படையிலேயே ஆண்டுதோறும் சிவாலயங்களில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு திருவோணம் சிவராத்திரியும், புதன்கிழமை மாசி அமாவாசையும் வருகின்றன. இதையடுத்து செவ்வாய் இரவு 10 மணிக்கு அம்மன் சன்னதியில் தொடங்கும் அபிஷேகம், புதன் அதிகாலை 1.30 மணிக்கு நிறைவடைகிறது. சுவாமி சன்னதியில் செவ்வாய் இரவு 11 மணிக்குத் தொடங்கும் அபிஷேகம் புதன் அதிகாலை 2.45 மணிக்கு முடிவடைகிறது.
கட்டளை அடிப்படையில் அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதில் பால், தயிர், மோர், பன்னீர், இளநீர், பழங்கள், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்கள் மூலம் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது ஓதுவார்கள் பாராயணம் பாடுவார்கள். விடிய விடிய சிவராத்திரி அபிஷேகத்தில் பங்கேற்கும் சிவாச்சாரியார்கள், பின்னர் வீடுகளுக்குச் சென்று விரதத்தை முடித்து பூஜை செய்வர்.
மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையில் நன்மை தருவார், தெற்கு மாசி வீதியில் உள்ள திருமறைநாதர், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் மற்றும் செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
சிறப்புப் பேருந்துகள்: சிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களுக்குச் செல்வர். இதையடுத்து மாட்டுத்தாவணியிலிருந்து ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருமாத்தூர் பகுதிக்கும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளுக்கும் விடிய விடிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு எல்லீஸ்நகர், பெரியார் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து ஜான்ஸிராணி பூங்கா பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நகரில் விடிய விடிய பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment