Sunday, December 21, 2014
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார்.
தாராபுரம் அருகே உள்ள சீராம்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32). நிதி நிறுவன அதிபர். இவருடைய மனைவி ராதா (25). இவர் தாராபுரம் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் செல்வமித்ரா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் மோட்டார்சைக்கிளில் வீட்டை விட்டு வெளியே சென்ற கனகராஜ் தனது மனைவி ராதா மற்றும் நண்பர்களிடம் செல்போனில் தொடர்புகொண்டு “நான் விஷம் குடித்து விட்டேன், ஒரு மணி நேரத்தில் இறந்து விடுவேன்“ என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்ததோடு மட்டுமின்றி செல்போனையும் அணைத்து வைத்துவிட்டார்.
இதனால் பதறிப்போன அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் ஒரு காரில் கனகராஜை தேடி அலைந்தனர். அவரை பல இடங்களிலும் தேடினார்கள். ஆனால் அவர்களால் கனகராஜை கண்டு பிடிக்க முடியாததால் நேராக தாராபுரம் போலீஸ் நிலையம் சென்று தகவல் கூறினார்கள். அப்போது தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு வெளியில் இருந்து தகவல் கூறிய ஒருவர் “ தில்லாபுரி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில் வயல்வெளியில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாகவும், அவருடைய வாயில் நுரைதள்ளி இருப்பதாகவும், அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் சற்று தொலைவில் நிற்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து கனகராஜ் உறவினர்கள் நேராக அங்கு சென்று பார்த்த போது, அது கனகராஜ் என தெரியவந்தது. உடனடியாக அவரை காரில் ஏற்றிக்கொண்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கனகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து தாராபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாச்சிமுத்து, ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கனகராஜ் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...

0 comments:
Post a Comment