Friday, February 28, 2020

On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது.

 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜேசிபி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த தொடக்க விழாவில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

 இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஆலோசகர் மனோகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் இச்சங்கம் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஜேசிபி எந்திரங்களுக்கு வாடகை குறைவாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சங்க உறுப்பினர்கள், காண்ட்ராக்டர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். படகு உரிமையாளர்கள் எந்திரங்களுகாண கடன் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். 


இந்த குறையை தீர்க்கும் வகையில் இச்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் மூலம் உறுப்பினர்கள் இனி குறைந்த வாடகைக்கு ஜேசிபி எந்திரங்களை பயன்படுத்த கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு 2,500 ரூபாய் வசூலிக்க வேண்டும் என சங்கத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதற்கு மேல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தலா 900 ரூபாய் வாடகை என்ற அடிப்படையில் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜேசிபி எந்திர தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. இந்த தொழிலை காப்பாற்றுவதற்காகவும், உரிமையாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு தான் இந்த வாடகை உயர்வு செய்யப்பட்டுள்ளது.
 எனவே ஒப்பந்ததாரர்கள், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.

பேட்டி: மனோகரன். திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர் சங்க ஆலோசகர்.
On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி தினமலர் பங்குதாரர் மறைந்த ராகவன் அவர்களின் மனைவி சுப்புலெட்சுமி உடல் நல குறைவால் காலமானார்.அவரது உடலுக்கு தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
                   

தமிழ்நாட்டில் முக்கால்வாசி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                  


தே.மு.தி.க விற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்ந்து கேட்டு வருகிறோம்.எல்லா   கட்சிகளிலும் மூத்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.அ.தி.மு.க தலைமை கழகம் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
தே.மு.தி.க விற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கூட்டணி அமைக்கும் போதே பேசியுள்ளோம்.

சி.ஏ.ஏ,என்.ஆர்.சி யால் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்காக தான் இத்தகைய சட்டங்கள் என்பதனைவரும் உணர வேண்டும்.இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு என்றால் அவர்களுக்காக களத்தில் இறங்கும் முதல் கட்சியாக தே.மு.தி.க இருக்கும்


தி.மு.க,அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தின் கடன் சுமையை மாறி மாறி ஏற்றுவதை நிறுத்தி விட்டு வேலைவாய்ப்பிற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்
On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி மாவட்டம், காஜாமலையில்
ஓம் ஹரிஸ் மருத்துவமனையை

 மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,

சுற்றுலாத்துறை அமைச்சர்
திரு.வெல்லமண்டி நடராஜன்,

 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
திருமதி.வளர்மதி

மாவட்ட கழக செயலாளர்கள்,
திரு.பா.குமார் Ex.MP, திரு.ரெத்தினவேல் Ex.MP

ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள்.
On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில்  கனரா வங்கி அதிகாரிகள் சங்க  பொதுச் செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டார்.


முன்னதாக அவர்  திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வங்கி அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அரசு அளிக்கும் ஊதிய உயர்வுக்கு எங்களுக்கு சம்மதம் இல்லை. அதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அடுத்தகட்டமாக மார்ச் மாதத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் 'ஏ' கிரேடு அதிகாரிகளுக்கு இணையான ஊதியம் வங்கி அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். இது தொடர்பாக நாளை ஐபிஏ சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதற்காக அனைத்து வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள், வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடத்தும் ஐபிஏ.க்கு பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே அதிகாரம் உள்ளது. ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அதிகாரம் இல்லை  என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சூழ்நிலையில் ஐபிஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பேச்சுவார்த்தை எவ்வாறு முடிகிறது என்பதை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.
On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
தமிழகத்தில் கொள்ளையடித்த பணத்தை துபாய் மற்றும்  பல நாடுகளுக்கு  பணப்பரிவர்த்தனை  செய்ய  நூதன திட்டம்  மத்திய புலனாய்வு நடவடிக்கை எடுக்குமா

தமிழகத்தில் இருந்து 450 எல்பின் குடும்பத்தினர் துபாய் பயணம் அப்படி பயணம் செய்ய IATA முறையான அங்கீகாரம் பெற்றுள்ளதா


(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது )


திருச்சி மன்னார்புரதில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் எல்பின் நிதி நிறுவனம். இந்நிறுவனத்தின் மீது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் எல்பின் குடும்பத்தினர் 450  பேர் வரும் 3 ,4 , 5,  தேதிகளில் துபாயில் உள்ள உலகிலேயே உயரமான கட்டிடத்தில் கூட்டம் நடத்த உள்ளோம் எனக்கூறி என்பின் உரிமையாளர் அழகர்சாமி (எ) ராஜா அனைவரையும் வருமாறு அழைத்துள்ளார்.

இங்கு மாபெரும் மாற்றம் நமக்கு நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார். இந்த 450 பேர் இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் தனியாரால் நடத்தப்படும் நிறுவனத்தின் கூட்டத்தில் பங்குபெற முறையான அனுமதி வாங்கி உள்ளனரா ? அல்லது இதற்கு அனுமதி எதுவும் தேவையில்லையா.? தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்த தடைவிதித்து இருந்தும் தஞ்சையில் கைது நடவடிக்கை எடுத்தும் மேலும் தஞ்சையில்  ஒருவர் தேடப்பட்டு வரும் நிலையில்



  காவல்துறை முறையாக நடவடிக்கை எடுத்து வரும் போதே திருச்சியில் நேற்று காலை மன்னார் புரத்தில் ஓர் புதிய ஹோட்டலில் கூட்டம் நடத்தப்பட்டது. முறையாக காவல்துறை அனுமதி பெற்றதா  இப்படி கூட்டம் நடத்தி வரும் பொழுது திருச்சியில்  எல்பின் நிறுவனத்தால் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டால் யாரை குற்றம் கூறுவார்கள் திருச்சி காவல் துறையால் முறையாக அனுமதி வழங்கப்பட்டதா ? இன்று காலை  முதல் திருச்சி சங்கம் ஹோட்டலில் கூட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சியில் ELFIN நிதி நிறுவனம் மக்கள் கூட்டம் நடத்த காவல்துறை டிஜிபி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் கண்டொன்மெண்ட் காவல்துறை இன்ஸ்பெக்டரிடம் ஸ்பெஷல் அனுமதி வாங்கி விட்டதாக எல்பின் சகோதரர்கள் கூறி வருவதாக தகவல்.



பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*


On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

அமைதியாக போராட்டம் நடத்திய இஸ்லாமியா்களுக்கு எதிராக வன்முறை நடைபெற்றதை கண்டித்து திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.   

                                                                                                                                        குடியுாிமை திருத்த சட்டத்திற்கு எதிா்ப்பு தொிவித்து இஸ்லாமியா்கள் போராட்டம் நடத்தி வந்தனா். அப்போது குடியுாிமை சட்டத்திற்கு ஆதரவு தொிவித்து மறுபுறம் போராட்டம் நடைபெற்றது. இது வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் 21 போ் உயிாிழந்தனா். இந்த சம்பவத்தை கண்டித்து திருச்சியில் இன்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு திரண்ட மக்கள் அதிகாரத்தினா், வன்முறை சம்பவத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினா். அமைதியான வழியில் போராட்டம் நடத்திய இஸ்லாமியா்கள் மீது திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டு உள்ளது என்று அவா்கள் குற்றம் சாட்டினா். மக்கள் அதிகாரத்தினா் ஆா்ப்பாட்டத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது..

Thursday, February 27, 2020

On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

திருச்சி ஜமால் முகமது கல்லுாாி மாணவா்கள் தலைகளில் துணி பட்டை அணிந்து குடியுாிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
                                                                                                   
                                                                                                    குடியுாிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜமால் முகமது கல்லுாாியிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுாிமை திருத்த சட்டம் வேண்டாம் என்ற வாசகம் பதிக்கப்பட்ட துணி பட்டையை தலையில் கட்டிக்கொண்டு வந்த மாணவா்கள் அச்சட்டத்தை கண்டித்தும், டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மாணவா்களும், ஏராளமான மாணவிகளும் கலந்து கொண்டனா். மாணவா்களின் ஆா்ப்பாட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசாா் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனா்.
On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

                

திருச்சி ஜெகன்மாதா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற நாணய கண்காட்சியினை ஏராளமான பள்ளி, கல்லுாாி மாணவ, மாணவிகள் ரசித்து மகிழ்ந்தனா். 

                 

                                                            
திருச்சி ஜெகன்மாதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் உலக நாணயம் மற்றும் பணத்தாள் கண்காட்சி இன்று நடைபெற்றது. 

இந்த கண்காட்சியினை பள்ளி தாளாளர் சகாயராஜ் தொடங்கி வைத்தார். பழங்காலம் முதல் தற்காலம் வரையிலான பணத்தாள்கள், காசோலை, வரைவோலை, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, பண வடிவ மற்ற பிட்காய்ன்கள் என பல்வேறு அம்சங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

 சங்க காலத்தில் மன்னா்களான சேர, சோழ, பாண்டியர் தங்கள் சின்னங்களான வில், மீன், புலி  முத்திரைகள் அடங்கிய நாணயங்கள், சங்க காலத்திற்கு பின் தமிழ் எழுத்துக்களுடன் பல்லவர் காலத்து நாணயங்களும் இடம் பெற்றிருந்தன. அமொிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 200 நாடுகளின் பணத்தாள்கள் , நாணயங்கள் மற்றும் தபால் தலைகளும் இக்கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. 

 இந்த கண்காட்சியினை ஏராளமான பள்ளி, கல்லுாாி மாணவா்களும், பொதுமக்களும் கண்டு ரசித்தனா். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார்,  முகமது சுபேர் உள்ளிட்டோா் இந்த நாணய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனா்.
On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் பணியாளா்கள் இன்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 
                                                                                                 
                                                               தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் சாா்பில் இன்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில், அச்சங்கத்தின் மாநில பொருளாளா் ஜெய்கணேஷ் தலைமையில் நடைபெற்ற 


இந்த ஆா்ப்பாட்டத்தில், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்,உயாி பணியாளா்களை இதர அரசு பணியிடங்களில் பணி அமா்த்திட வேண்டும், முறையற்ற ஆய்வுகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மாநில தலைவா் சிவக்குமாா், மாநில செயலாளா்கள் முருகானந்தம், கோவிந்தராஜன், இளங்கோவன், கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலா் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.