Friday, July 18, 2014
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
கல்லூரி விடுதியில் படித்து வந்த என்னை வடிவேல் மற்றும் சிலர் எனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி அழைத்து வந்தனர்.
இதன்பிறகு அவர்கள் வடிவேலுவுக்கு என்னை கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டனர். இவ்வாறு கூறி உள்ளார்.
இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவிட்டார்.
இது பற்றி இன்ஸ்பெக்டர் பிரேமலதா விசாரணை நடத்தினார்.
இதை தொடந்து கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையொட்டி வடிவேல் மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்ததாக அங்கமுத்து ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் அங்கமுத்து ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீபிரியாவின் கணவர் ஆவார். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment