Friday, July 18, 2014
ஈரோடு 57–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபு. இவரது தம்பி பாலாஜி.இவர் ஈரோடு மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவராக உள்ளார். இவர்கள் ஆர்.கே.வி. ரோட்டில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார்கள். இந்த கடை முன்பு பூக்கடையும் வைத்து அவர்கள் நடத்தி வந்தனர்.
இதற்கு ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியுமான பி.பி.கே.பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.இதை தொடர்ந்து நேற்று இரவு அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதில் கவுன்சிலர் பிரபுவின் தம்பி முரளிதரன் படுகாயம் அடைந்தார். மற்றும் பி.பி.கே பழனிச்சாமி தரப்பில் அவரது மகன் பி.பி.கே.மணிகண்டன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த மோதலில் பிரபு வுக்கு சொந்தமான ஒட்டலின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த சம்பவத்தினால் கடைவீதி பகுதியில் நேற்று சிறிது பரபரப்பும் ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment