Friday, July 18, 2014
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பள்ளி செல்லும் மாணவ– மாணவிகள் சாக்கடையில் மிதித்து செல்ல வேண்டிய அவலம் உருவாகியுள்ளது. இதனால் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தூக்கிச் சென்று சாக்கடையை தாண்டி இறக்கிவிட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இது பற்றி பொது மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட 500–க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை திடீரென்று அம்பத்கர் கல்லூரி சாலையின் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்படடது.
தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழைய வண்ணாரப் பேட்டை ஜி.ஏ. ரோட்டில் உள்ள நடைபாதை வியாபாரிகள் இன்று காலை கல்லரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினர் சிலர் மாமூல் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டினர். வியாபாரிகளுக்கு ஆதரவாக ம.தி.மு.க.வினரும் மறியலில் கலந்து கொண்டனர்.
ராயபுரம் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment