Thursday, July 17, 2014

On Thursday, July 17, 2014 by Anonymous in    
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுங்கச்சாவடிகளில் பிரீபெயிட் கார்ட் வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மகாபலிபுரம் சாலை, புழல் சாலை உள்ளிட்ட சில முக்கிய சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ப்ரீபெயிட் கார்ட் வசதி முறை தற்போது அமலில் உள்ளது. உங்கள் கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலம் ப்ரீபெயிட் கார்டுக்கு உரிய கட்டணத்தை செலுத்தி ஒரு கார்டைப் பெற்றுக் கொள்ளலாம். இதை உங்கள் வாகனத்தின் முன்பகுதியில் ஒட்டி விட்டால், உங்களுக்கென விசேஷப் பாதையில் நீங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருக்காமல் சென்று விடலாம்.
நீங்கள் செலுத்திய தொகை முடிவடைந்தது என்றால், கார்டை ரீச்சார்ஜ் செய்துக்கொள்ளலாம். இதற்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், விரைவில் இந்த முறை தமிழகம் முழுவதும் அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

0 comments: