Saturday, August 16, 2014
400 ஆண்டுகள் பழமையான அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலை முதலமைச்சரின் அன்னதான விரிவாக்க திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுபோக மதுரைக்கு வரும் பக்தர்கள் மீனாட்சியம்மன்கோவில், அழகர் கோவில் உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அலங்காநல்லூரில் உள்ள முனியாண்டி சுவாமி கோவிலுக்கும் வந்து செல்கின்றனர். உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு ஆண்டுதோறும் நடைபெறும்போது முனியாண்டி சுவாமிக்கு முதல் பூஜையும், மரியாதை செய்த பின்னரே தொடங்கப்படுவது தொன்று தொட்டு இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 106 கோவில்கள் அன்னதான திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதில் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலும் சேர்க்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
0 comments:
Post a Comment