Saturday, August 16, 2014
முருகனின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவிலுக்கு இலுப்பூரி லிருந்து 108 காவடிகள் எடுத்து பக்தர்கள் பாதையாத்திரையாக சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் திருமுருகன் வார வழிபாட்டு சபை சார்பில் 41–ம் ஆண்டு 108 காவடிகள் முருகபக்தர்கள் இலுப்பூரிலிருந்து புறப்பட்டு சென்றனர்.
தொடர்ந்து திருச்சி, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் வழியாக 4–வது நாள் வந்து அழகர்கோவில் கோட்டை வாசலை அடைந்தனர்.
பால், பன்னீர், புஷ்பம், மயில் போன்ற காவடிகள் எடுத்து ஆடிப்பாடி பாதயாத்திரையாகவே அழகர்மலை வந்து மலை உச்சியில் உள்ள சோலை முருகன் கோவிலை சேர்ந்தனர். இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். கோவிலுக்குள் மேளதாளம் முழங்க பக்தர்கள் சுமார் ஒரு மணிநேரம் காவடிகளுடன் ஆடினார்கள்.
தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத முருக பெருமானுக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி, சந்தனம், இளநீர் உள்ளிட்ட 36 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சுமார் 160 கிலோமீட்டர் தூரம் பாதையாத்திரையாக வந்த முருக பக்தர்களை கோவில் நிர்வாகத்தின் சார்பில் தக்கார் வெங்கடாசலம் ஏற்பாட்டில் நிர்வாக அதிகாரி வரதராஜன் மற்றும் முருகன் கோவில் பணியாளர்கள் வரவேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை இலுப்பூர் வார வழிபாட்டுச் சபையின் தலைவர் முத்து விநாயகம், செயலாளர் சந்தானம், பொருளாளர் சேகரன் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர்,அக்.4- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் ...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
0 comments:
Post a Comment