Wednesday, August 27, 2014
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆக.1 முதல்
ஆக.25 ஆம் தேதி வரை 35 ஆயிரம் பாஸ்போர்ட்டுகள் விண்ணப்பதாரர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளன.
அச்சிடப்படாத பாஸ்போர்ட் புத்தகங்கள் தட்டுப்பாடு காரணமாக, விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது தாமதம் ஆகி வந்தது. இதனால் விண்ணப்பதாரர்கள் இரு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. அச்சிடப்படாத பாஸ்போர்ட் புத்தகங்கள் பற்றாக்குறை நாடு முழுவதும் இருந்ததால், மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் பாஸ்போர்ட்டுக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. கடந்த சில மாதங்களாக இப் பிரச்னை நீடித்த நிலையில், தற்போது காத்திருப்பில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.மணீஸ்வரராஜா வெளியிட்டுள்ள செய்தி:
இந்தியாவில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும், தூதரகங்களுக்கும் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள இந்திய செக்யூரிட்டி அச்சகத்தில் இருந்து அச்சடிக்கப்படாத பாஸ்போர்ட் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களாக குறைந்த உற்பத்தி காரணமாக, நாட்டில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் குறைந்த எண்ணிக்கையிலேயே வழங்கப்பட்டது.
மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் துரிதமாக பாஸ்போர்ட் புத்தகங்களை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆக.1 ஆம் தேதி முதல் ஆக.25 ஆம் தேதி வரை 35 ஆயிரத்து 529 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. விடுமுறை நாள்களிலும் மூன்று சுழற்சி முறையில் இரவு-பகலாக பாஸ்போர்ட் அச்சிட்டு தேக்கநிலையில் இருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது போதிய அளவில் பாஸ்போர்ட் புத்தகங்கள் இருப்பில் உள்ளதால், இனி வரும் காலங்களில் தாமதமின்றி விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றார்.
அச்சிடப்படாத பாஸ்போர்ட் புத்தகங்கள் தட்டுப்பாடு காரணமாக, விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது தாமதம் ஆகி வந்தது. இதனால் விண்ணப்பதாரர்கள் இரு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. அச்சிடப்படாத பாஸ்போர்ட் புத்தகங்கள் பற்றாக்குறை நாடு முழுவதும் இருந்ததால், மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் பாஸ்போர்ட்டுக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. கடந்த சில மாதங்களாக இப் பிரச்னை நீடித்த நிலையில், தற்போது காத்திருப்பில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.மணீஸ்வரராஜா வெளியிட்டுள்ள செய்தி:
இந்தியாவில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும், தூதரகங்களுக்கும் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள இந்திய செக்யூரிட்டி அச்சகத்தில் இருந்து அச்சடிக்கப்படாத பாஸ்போர்ட் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களாக குறைந்த உற்பத்தி காரணமாக, நாட்டில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் குறைந்த எண்ணிக்கையிலேயே வழங்கப்பட்டது.
மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் துரிதமாக பாஸ்போர்ட் புத்தகங்களை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆக.1 ஆம் தேதி முதல் ஆக.25 ஆம் தேதி வரை 35 ஆயிரத்து 529 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. விடுமுறை நாள்களிலும் மூன்று சுழற்சி முறையில் இரவு-பகலாக பாஸ்போர்ட் அச்சிட்டு தேக்கநிலையில் இருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது போதிய அளவில் பாஸ்போர்ட் புத்தகங்கள் இருப்பில் உள்ளதால், இனி வரும் காலங்களில் தாமதமின்றி விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
0 comments:
Post a Comment