Saturday, August 30, 2014
அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் கரூர் வைஸ்யா வங்கி உள்ளது. இதில் கேஷியர்களாக லோகேஷ், பிரதீப் ஆகியோர் உள்ளனர்.
இன்று காலை 10.45 மணியளவில் வங்கியிலிருந்து 2 பேரும் ரூ.30 லட்சம் பணத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு மின்னல் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் கட்டுவதற்காக எடுத்துச் சென்றனர்.
மின்னல் ஏரிக்கரை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே பைக்கில் 3 பேர் முகமூடி அணிந்து வந்தனர். அவர்கள் திடீரென லோகேஷ், பிரதீப் சென்ற பைக்கை வழிமறித்து நிறுத்தினர்.
இதையடுத்து வேகமாக இறங்கிய அவர்கள், லோகேசையும், பிரதீப்பையும் கத்தியால் வெட்டினர். அதிர்ச்சியடைந்த அவர்கள் சுதாரிக்க முயல்வதற்குள் அவர்களிடமிருந்த ரூ.30 லட்சம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கேஷியர்கள் கத்தி கூச்சலிட்டனர். அங்கிருந்தவர்கள் ஓடிவந்து கொள்ளையர்களை துரத்தி சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. காயமடைந்த கேஷியர்கள் 2 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அரக்கோணம் டி.எஸ்.பி. கண்ணப்பன், தாலுகா இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் வங்கி கேஷியர்களை கத்தியால் வெட்டி பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment