Saturday, August 30, 2014
அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் கரூர் வைஸ்யா வங்கி உள்ளது. இதில் கேஷியர்களாக லோகேஷ், பிரதீப் ஆகியோர் உள்ளனர்.
இன்று காலை 10.45 மணியளவில் வங்கியிலிருந்து 2 பேரும் ரூ.30 லட்சம் பணத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு மின்னல் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் கட்டுவதற்காக எடுத்துச் சென்றனர்.
மின்னல் ஏரிக்கரை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே பைக்கில் 3 பேர் முகமூடி அணிந்து வந்தனர். அவர்கள் திடீரென லோகேஷ், பிரதீப் சென்ற பைக்கை வழிமறித்து நிறுத்தினர்.
இதையடுத்து வேகமாக இறங்கிய அவர்கள், லோகேசையும், பிரதீப்பையும் கத்தியால் வெட்டினர். அதிர்ச்சியடைந்த அவர்கள் சுதாரிக்க முயல்வதற்குள் அவர்களிடமிருந்த ரூ.30 லட்சம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கேஷியர்கள் கத்தி கூச்சலிட்டனர். அங்கிருந்தவர்கள் ஓடிவந்து கொள்ளையர்களை துரத்தி சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. காயமடைந்த கேஷியர்கள் 2 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அரக்கோணம் டி.எஸ்.பி. கண்ணப்பன், தாலுகா இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் வங்கி கேஷியர்களை கத்தியால் வெட்டி பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment