Tuesday, February 03, 2015
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் 10 நாட்கள் நடைபெற உள்ள இக்கண்காட்சியை மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் தலைமை வகித்தார். இதைத் தொடர்ந்து கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 105 அரங்கங்களில் வண்ணமயமாக குவிக்கப்பட்டுள்ள புத்தகங்களை தலைவர்கள் பார்வையிட்டனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் என்.சுப்பிரமணியம் வரவேற்றார். இதைத் தொடர்ந்து முதல் புத்தக விற்பனையை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் தொடக்கி வைக்க, முதல் புத்தகத்தை துணை மேயர் சு.குணசேகரன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் சைமா செயலாளர் எம்பரர் வி.பொன்னுசாமி, டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம், பில்டர்ஸ் அசோஷியேசன் ஆப் இந்தியா திருப்பூர் மையத் தலைவர் டி.சண்முகராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக நிமிர்வு கலையகத்தின் பறை முழக்கக் கலைநிகழ்ச்சி கண்காட்சிக்கு வந்திருந்த அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. முதல் நாளிலேயே வாசகர்கள், பார்வையாளர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
புத்தகக் கண்காட்சி வரவேற்புக்குழுத் தலைவர் கே.ஜெயபால், செயலாளர் செ.முத்துக்கண்ணன், பொருளாளர் அ.நிசார் அகமது, துணைத் தலைவர்கள் அரிமா எம்.ஜீவானந்தம், லிங்க்ஸ் சௌகத் அலி, வீனஸ் கே.பழனிசாமி, என்.கோபாலகிருஷ்ணன், விழிப்பு நடராஜன், கே.உண்ணிகிருஷ்ணன், எஸ்.பொன்ராம், தாண்டவக்கோன், செ.நடேசன், டிஎம்எல் ஆறுமுகம், க.சுந்தரம், இணைச் செயலாளர்கள் ஆர்.ஈஸ்வரன், கே.காமராஜ், எஸ்.சுப்பிரமணியம், பி.சௌந்திரபாண்டியன், கீதாஞ்சலி கோவிந்தப்பன், எம்.ராஜகோபால், கேரவன் எஸ்.ஆறுமுகம், பழ.விஸ்வநாதன், ஆசிரியர் பாலு உள்பட நிர்வாகிகள் மற்றும் வரவேற்புக்குழுவினர் பங்கேற்றனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியின் நிறைவாக சி.சந்திரசேகர் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
0 comments:
Post a Comment