Tuesday, February 03, 2015
திருப்பூர் மாவட்ட காவல்துறையும், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் இணைந்து நடத்தும் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு 5 நாள் கிரிக்கெட் போட்டி நாளை பல்லடம் புரொபஷனல் கல்லூரியில் துவங்குகிறது.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறை-பொதுமக்களி டையே நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக, மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் காவல்துறை பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள்- 2015 நாளை 03.02.2015 முதல் 07.02.2015 வரை தொடந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் பல்லடம் புரொபஷனல் கல்லூரி மற்றும் உடுமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதனங்களில் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, அவினாசி மஹாராஜா பொறியியல் கல்லூரி, பல்லடம் பார்க் கல்லூரி, புரொபஷனல் கல்லூரி, ஸ்கேட் கல்லூரி, ஏஞ்சல் கல்லூரி, ஜெய் ஸ்ரீ ராம் கல்லூரி, ஏ. ஜி கலை கல்லூரி, உடுமலை அரசு கலை & அறிவியல் கல்லூரி, வித்யசாகர் கல்லூரி, தாராபுரம் மஹாராணி பாலிடெக்னிக் கல்லூரி, பிஷப் த்ரோப் கலை & அறிவியல் கல்லூரி, காங்கயம் ஈ.பி.ஈ.டி குழும பயிலகம், ஊத்துக்குளி ராமநாதன் பொறியல் கல்லூரி, சசூரி பொறியல் கல்லூரி மற்றும் வெள்ளகோவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 15 கல்லூரிகள் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பான அணியும் கலந்து கொள்கின்றன.
முதல் போட்டி பல்லடம் புரொபஷனல் கல்லூரியில் நாளை 3ம் தேதியன்று துவங்கிறது.இந்நிகழ் ச்சியில் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் ஆயுஷ்மணி திவாரி,திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் கழகத்தின் தலைவர் சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங் துவக்கி வைக்கிறார். மேற்கண்டவாறு மாவட்ட காவல்துறை அனுப்ப்பியுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment