Sunday, February 01, 2015
மதுரை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்த கோதண்டராமன் மகன் குருமணி (வயது25), கம்பி கட்டும் தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
தி.மு.க. பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் அட்டாக் பாண்டியின் தரப்பினருக்கும், குருமணிக்கும் தகராறு இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குருமணி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் குருமணியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து தெற்கு வாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குருமணியை பற்றி விசாரித்து தேடி வந்தனர்.
குருமணியுடன் மோதியவர்களை பிடித்து விசாரித்த போது குருமணி கடத்தி கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து குருமணியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் அட்டாக் பாண்டியின் கூட்டாளியான சந்தானம் உள்பட 4 பேரை பிடித்து மேலும் துருவி, துருவி விசாரித்தனர்.
இந்த விசாரணையில் வாலிபர் குருமணியை சந்தானம் உள்பட 9 பேர் சேர்ந்து கடத்தி அடித்து கொன்றுவிட்டு உடலை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அடர்ந்த சீமை கருவேல் மரங்களுக்கு மத்தியில் எரித்தனர். பின்னர் உடல் முழுவதும் எரிந்ததும் அதன் அடையாளம் தெரியாதபடி சாம்பலை அள்ளி அருகில் உள்ள குளத்தில் கரைத்தது தெரியவந்தது. இதையடுத்து அட்டாக் பாண்டியின் கூட்டாளிகளான சந்தானம், திருப்பதி, முத்துமணி, நயினா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து கொலை நடந்த இடம், உடல் எரிக்கப்பட்ட இடம், சாம்பல் கரைக்கப்பட்ட குளம் ஆகியவற்றை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இந்த கொலைக்கும், அட்டாக் பாண்டிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தி.மு.க. பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் அட்டாக் பாண்டியின் தரப்பினருக்கும், குருமணிக்கும் தகராறு இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குருமணி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் குருமணியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து தெற்கு வாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குருமணியை பற்றி விசாரித்து தேடி வந்தனர்.
குருமணியுடன் மோதியவர்களை பிடித்து விசாரித்த போது குருமணி கடத்தி கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து குருமணியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் அட்டாக் பாண்டியின் கூட்டாளியான சந்தானம் உள்பட 4 பேரை பிடித்து மேலும் துருவி, துருவி விசாரித்தனர்.
இந்த விசாரணையில் வாலிபர் குருமணியை சந்தானம் உள்பட 9 பேர் சேர்ந்து கடத்தி அடித்து கொன்றுவிட்டு உடலை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அடர்ந்த சீமை கருவேல் மரங்களுக்கு மத்தியில் எரித்தனர். பின்னர் உடல் முழுவதும் எரிந்ததும் அதன் அடையாளம் தெரியாதபடி சாம்பலை அள்ளி அருகில் உள்ள குளத்தில் கரைத்தது தெரியவந்தது. இதையடுத்து அட்டாக் பாண்டியின் கூட்டாளிகளான சந்தானம், திருப்பதி, முத்துமணி, நயினா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து கொலை நடந்த இடம், உடல் எரிக்கப்பட்ட இடம், சாம்பல் கரைக்கப்பட்ட குளம் ஆகியவற்றை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இந்த கொலைக்கும், அட்டாக் பாண்டிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
0 comments:
Post a Comment