Wednesday, August 31, 2016
On Wednesday, August 31, 2016 by Unknown in Break
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்பட 18 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பென்ஜமின் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் பணிக்கு வந்த பின்னர் பள்ளியில் பல மாறுதல்கள் கொண்டு வரப்பட்டு, நிர்வாகம் சிறப்பாக இருந்தது என்றும் மாணவ-மாணவிகளின் கல்வித்தரம் உயர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பொதுத் தேர்வுகளில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தலைமை ஆசிரியர் பென்ஜமின் கடந்த வாரம் மாறுதல் பெற்று சென்றார்.
இது மாணவ-மாணவிகளையும் பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்கள் பென்ஜமினை மீண்டும் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பென்ஜமினை தலைமை ஆசிரியராக நியமிக்காவிட்டால் நாங்கள் பள்ளிக்கு செல்லமாட்டோம் என்று கூறி இன்று காலை மாணவ- மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.
பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் இன்று காலை பள்ளிக்கு முன்பு திரண்டனர். பள்ளியின் கேட்டை பூட்டு போட்டு மூடினர். அவர்களின் போராட்டத்துக்கு மாணவ- மாணவிகளின் பெற்றோரும் ஆதரவு தெரிவித்தனர்.
பள்ளிக்கு வந்த ஆசிரியர்களையும் மாணவ- மாணவிகள் உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மாணவ-மாணவிகளின் போராட்டம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது..
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
