Wednesday, August 31, 2016
On Wednesday, August 31, 2016 by Unknown in Chennai
தீனதயாளன் (வயது 84). இவரை கடந்த ஜூன் மாதம், சிலை கடத்தல் வழக்கில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஜாமீன் மனு தள்ளுபடியானதைத் தொடர்ந்து 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தீனதயாளன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், 65 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருவதாகவும், வயதான தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதில் அளிக்கும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
இந்நிலையில் தீனதயாளனின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, தீனதயாளனின் ஜாமீன் மனுவை நீதிபதி மீண்டும் தள்ளுபடி செய்தார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
