Wednesday, August 31, 2016
On Wednesday, August 31, 2016 by Unknown
மணப்பாறை: திருச்சி மணப்பாறையில் 7 ஆயிரம் மாணவ மாணவிகள் தமிழின் முதல் எழுத்தான அ வடிவில் நின்று கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் அமைப்பு ஒன்று தமிழ் மொழியின் முதல் எழுத்தான அ வடிவில் மாணவ மாணவியரை நிற்க வைத்து கின்னஸ் சாதனை செய்யும் முயற்சியில் நேற்று ஈடுபட்டது. இதற்கான பணிகள் கடந்த ஒரு வார காலமாகவே நடந்து வந்த நிலையில், நேற்று கோவில்பட்டி சாலையில் உள்ள தியாகேசர் ஆலை பள்ளி மைதானத்தில் அ எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டது. பின்னர், அந்த வடிவத்தின் மீது மாணவர்கள் நிற்கும் அளவிற்கு கட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி போது, 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அ வடிவத்தில் தங்களுகென்று ஒதுக்கப்பட்ட கட்டங்களில் சென்று அமர்ந்து கொண்டனர். பின்னர், அனைவரும் ஒரே நேரத்தில் மொத்தமாக எழுந்து நின்று கையில் வைத்திருந்த மஞ்சள் நிற அட்டைகளை 5 நிமிடம் உயர்த்திப் பிடித்தனர். அப்போது மேலிருந்து பார்ப்பதற்கு அ என்ற தமிழ் மொழின் முதல் எழுத்து அழகாக மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் திருக்குறளின் 4 அத்தியாயங்களில் உள்ள 40 குறள்களையும் ஒருமித்த குரலில் ஒரே மாதிரி கூறி அங்கிருந்தவர்களை அசத்தினார்கள். இந்த சாதனை நிகழ்ச்சிக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதற்கு முன்னர் 2000 பேர் கலந்து கொண்டு ஆங்கில எழுத்தான எம் வடிவில் நின்றதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. இந்நிலையில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
