Sunday, February 01, 2015
கேரளாவில் தாக்குதல் நடத்தும் மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிரடிப்படை ஐ.ஜி. கூறினார்.
தமிழகம் மற்றும் கேரள எல்லையில் ஊடுருவியுள்ள மாவோயிஸ்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் கேரள மாநிலத்தின் அட்டப்பாடி வனத்துறை அலுவலகத்திற்கு அவர்கள் தீ வைத்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் மாவோயிஸ்டுகள் கேரளா, தமிழகத்தில் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் கேரளாவின் கண்ணனூர் கல்குவாரி மற்றும் உணவு விடுதிகளில் தாக்குதல் நடந்தது. இதனால் இரு மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் (ஜனவரி) போலீசார் குருக்கி மலை, பங்கிதமால் மலைப்பகுதிகளை கண்காணித்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் சிலர் நடமாடுவது கண்காணிப்பு காமிராவில் பதிவானது. எனவே தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவாமல் தடுப்பது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. சங்கர் ஜீவால் தலைமை தாங்கினார்.
தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி.க்கள் ஆனந்த்குமார், சோமானி, அமீத்சான், அறிவுச்செல்வம், போலீஸ் சூப்பிரண்டுகள் விஜயேந்திர பிதாரி, மகேஸ்வரன், சரவணன், மகேஷ், அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ஐ.ஜி. சங்கர் ஜீவால், கேரளாவில் தாக்குதல் நடத்தும் மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்கவும், அவர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 12.9.16 திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தலைமையகம் முற்றுகை போரட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது திருச்சிய...
-
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக இருந்த கே.ராஜபாண்டியன் கடந்த 2013–ம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அ....
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
0 comments:
Post a Comment