Wednesday, August 27, 2014
மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர். இங்குள்ள 1–வது வார்டில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.
இது குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் கூறினர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்களும் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கீழவளவு சப்– இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு ரமேஷ், வெள்ளலூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்னபொண்ணு மகாலிங்கம் ஆகியோர் மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சின்ன பொண்ணு மகாலிங்கம் கூறும்போது, சில இடங்களில் அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இவைகள் சீர் செய்யப்பட்டு இன்னும் ஒரு வாரத்தில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
0 comments:
Post a Comment