Thursday, August 14, 2014
அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக
நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, பாபா அணு ஆராய்ச்சி
மைய (சென்னை) முதுநிலை விஞ்ஞானி ஜே. டேனியல் செல்லப்பா கூறினார்.
நாட்டுப்புறக் கலைகளின் வழியாக அறிவியல் கருத்துகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், மதுரை யாதவர் கல்லூரியில் நான்கு நாள்கள் நடைபெறும் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, விஞ்ஞானி டேனியல் செல்லப்பா பேசியது:
அறிவியல்தான் அனைத்துக்கும் அடிப்படையாக இருக்கிறது. அறிவியல் இல்லையெனில் எந்தவொரு பொறியியலும், தொழில்நுட்பமும் கிடையாது. அறிவியல் கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லும்போதுதான், அத்தகைய கண்டுபிடிப்புகள் முழுமையடைகின்றன.
அந்த வகையில் பாபா அணு ஆராய்ச்சி நிலையும், அணு ஆராய்ச்சி மட்டுமின்றி மக்களுக்குத் தேவையான விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளிலும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, பயறு வகைகளில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றான நிலக்கடலை ரகம், சிறைத் துறைக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இதில், சிறைவாசிகள் பயிரிட்டதில், ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளனர். இதேபோல், குறைந்த தண்ணீரைக் கொண்டு மேற்கொள்ளும் சாகுபடி தொழில்நுட்பங்கள், திடக்கழிவு மேலாண்மைத் தொழில்நுட்பம் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அவற்றை மக்களால் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய முறையில் கொண்டு சேர்க்கும்போதுதான், அதன் நோக்கம் நிறைவேறுகிறது.
இத்தகைய அறிவியல் தொழில்நுட்பங்களை மக்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய ஒரு கருவியாக நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.
கருத்தரங்கின் முதன்மை நெறியாளர் பி.எஸ். நவராஜ், புதுச்சேரி பல்கலைக்கழக மானுடவியல் துறைத் தலைவர் ஏ. செல்லபெருமாள், யாதவர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ். தனசேகரன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் வி. கோபால் உள்ளிட்டோர் பேசினர்.
நாட்டுப்புறக் கலைகளின் வழியாக அறிவியல் கருத்துகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், மதுரை யாதவர் கல்லூரியில் நான்கு நாள்கள் நடைபெறும் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, விஞ்ஞானி டேனியல் செல்லப்பா பேசியது:
அறிவியல்தான் அனைத்துக்கும் அடிப்படையாக இருக்கிறது. அறிவியல் இல்லையெனில் எந்தவொரு பொறியியலும், தொழில்நுட்பமும் கிடையாது. அறிவியல் கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லும்போதுதான், அத்தகைய கண்டுபிடிப்புகள் முழுமையடைகின்றன.
அந்த வகையில் பாபா அணு ஆராய்ச்சி நிலையும், அணு ஆராய்ச்சி மட்டுமின்றி மக்களுக்குத் தேவையான விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளிலும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, பயறு வகைகளில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றான நிலக்கடலை ரகம், சிறைத் துறைக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இதில், சிறைவாசிகள் பயிரிட்டதில், ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளனர். இதேபோல், குறைந்த தண்ணீரைக் கொண்டு மேற்கொள்ளும் சாகுபடி தொழில்நுட்பங்கள், திடக்கழிவு மேலாண்மைத் தொழில்நுட்பம் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அவற்றை மக்களால் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய முறையில் கொண்டு சேர்க்கும்போதுதான், அதன் நோக்கம் நிறைவேறுகிறது.
இத்தகைய அறிவியல் தொழில்நுட்பங்களை மக்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய ஒரு கருவியாக நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.
கருத்தரங்கின் முதன்மை நெறியாளர் பி.எஸ். நவராஜ், புதுச்சேரி பல்கலைக்கழக மானுடவியல் துறைத் தலைவர் ஏ. செல்லபெருமாள், யாதவர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ். தனசேகரன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் வி. கோபால் உள்ளிட்டோர் பேசினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ Á¼òÐìÌÇõ ¾¡æì¸¡ §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡÷ ¯ñ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
செயற்கை கருத்தரிப்பு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் குரு மருத்துவமனையில் முதன் முறையாக திருமணமாகி 20 வருடங்கள் கழித்து 50 வயது பெண் ஒர...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
0 comments:
Post a Comment