Thursday, August 14, 2014
மதுரை மாநகராட்சி சார்பில், நான்கு மண்டலங்களிலும்
அம்மா மக்கள் சேவை மையங்கள் தொடங்கப்பட்டு, ரூ. 96.7 லட்சம் மதிப்பிலான
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அனைத்து மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் சேவை மையங்கள் தொடங்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, மதுரை மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் அம்மா மக்கள் சேவை மையங்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் சி. கதிரவன் ஆகியோர் இம்மையங்களைத் தொடங்கி வைத்தனர்.
பிறப்பு, இறப்புச் சான்றிதழ், வர்த்தக உரிமம், தொழில்வரி விதிப்பு செய்தல், காலிமனை வரிவிதிப்பு, கட்டட வரைபட அனுமதி, சொத்துவரி விதிப்பு, சொத்துவரி பெயர் மாற்றம், குடிநீர் குழாய் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, நகர்ப்புற குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்குதல் உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் இம் மையங்களில் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இச் சேவை மையம் குறித்து, மேயர் கூறியது: அம்மா சேவை மையங்கள் நான்கு மண்டலங்களிலும் ஒவ்வொரு புதன்கிழமையும் செயல்படும். முதல் நாளில் நான்கு மண்டலங்களிலும் 390 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நகர்ப்புற குடிசை மேம்பாட்டுத் திட்டத்தில் காங்கிரீட் வீடுகள் கட்ட 371 பயனாளிகளுக்கு ரூ.96.7 லட்சம், 32 பேருக்கு பிறப்பு, இறப்புச் சான்று, 42 பேருக்கு கட்டட வரைபட அனுமதி, 20 பேருக்கு சொத்துவரி விதிப்பு, 17 பேருக்கு சொத்துவரி பெயர் மாற்றம், 60 பேருக்கு குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்பு, 7 பேருக்கு வர்த்தக உரிமம் ஆகியவற்றுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் கு. திரவியம், மண்டலத் தலைவர்கள் பெ. சாலைமுத்து, கே. ராஜபாண்டியன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அனைத்து மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் சேவை மையங்கள் தொடங்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, மதுரை மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் அம்மா மக்கள் சேவை மையங்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் சி. கதிரவன் ஆகியோர் இம்மையங்களைத் தொடங்கி வைத்தனர்.
பிறப்பு, இறப்புச் சான்றிதழ், வர்த்தக உரிமம், தொழில்வரி விதிப்பு செய்தல், காலிமனை வரிவிதிப்பு, கட்டட வரைபட அனுமதி, சொத்துவரி விதிப்பு, சொத்துவரி பெயர் மாற்றம், குடிநீர் குழாய் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, நகர்ப்புற குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்குதல் உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் இம் மையங்களில் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இச் சேவை மையம் குறித்து, மேயர் கூறியது: அம்மா சேவை மையங்கள் நான்கு மண்டலங்களிலும் ஒவ்வொரு புதன்கிழமையும் செயல்படும். முதல் நாளில் நான்கு மண்டலங்களிலும் 390 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நகர்ப்புற குடிசை மேம்பாட்டுத் திட்டத்தில் காங்கிரீட் வீடுகள் கட்ட 371 பயனாளிகளுக்கு ரூ.96.7 லட்சம், 32 பேருக்கு பிறப்பு, இறப்புச் சான்று, 42 பேருக்கு கட்டட வரைபட அனுமதி, 20 பேருக்கு சொத்துவரி விதிப்பு, 17 பேருக்கு சொத்துவரி பெயர் மாற்றம், 60 பேருக்கு குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்பு, 7 பேருக்கு வர்த்தக உரிமம் ஆகியவற்றுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் கு. திரவியம், மண்டலத் தலைவர்கள் பெ. சாலைமுத்து, கே. ராஜபாண்டியன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment