Tuesday, August 12, 2014
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் கம்பம் மெட்டு பகுதி உள்ளது. கம்பம் மேற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதி தமிழக –கேரள எல்லை பகுதியான கம்பம் மெட்டுவரை பரவி உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள கேரள பகுதியில் குடியிருப்புகள் உள்ளது.
கடந்த சிலநாட்களுக்கு கம்பம் மெட்டு வண்டானம் பகுதியை சேர்ந்த மோன்குட்டன் என்பவரின் 2 எருமை கன்றுகள் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன. இவை இரண்டும் கொல்லப்பட்டு காட்டில் கிடந்தது.
இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் எருமைகன்றுகளை சிறுத்தை புலி கொன்று இருப்பது தெரியவந்தது.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் கேரள– தமிழக வன எல்லையோர மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
ஏற்கனவே வனத்தில் இருந்து வெளியேறி விவசாயத்தை அழிக்கும் குரங்குகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது சிறுத்தை நடமாட்டத்தை பார்த்து தூக்கத்தை தொலைத்து உள்ளனர்.
எனவே வன விலங்குகள் ஊடுருவலை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...