Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by Unknown in ,    
திருப்பரங்குன்றம் தாலுகாவில், முதியோர் உதவித்தொகை பெறுபவர்களில் தகுதி இல்லாதவர்களை நீக்க, அதிகாரிகள் கணக்கெடுப்புப் பணிகளை தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
ஆதரவற்ற முதியோர்கள், ரூ. 5000-க்கு மேல் சொத்து இல்லாதவர்கள், மகன், மகள் ஆதரவில்லாதவர்கள், உழைக்கக் கூடிய சக்தியில்லாதவர்கள் மற்றும் விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உதவித் தொகையாக முதலில் நூறு ரூபாயும், பின்பு அடுத்தடுத்த காலங்களில் படிப்படியாக ரூ. 200, ரூ. 400 எனவும் வழங்கியது.
இதனை, தற்போது ஆயிரம் ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால், கிராமவாசிகள் முதல் நகரவாசிகள் வரை அனைவரும் முதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர்.
அதேபோல், அம்மா திட்ட முகாம், மனுநீதி நாள் முகாம் உள்ளிட்ட முகாம்களின் போதும் 90 சதவிகிதத்தினர் உதவித்தொகை கோரியே விண்ணப்பிக்கின்றனர். இதில், பெரும்பாலானவர்கள் வசதி படைத்தவர்களும், அரசியல்வாதிகளின் உறவினர்களுமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், இது தகுதியுள்ளவர்களுக்கு கிடைக்காமலும் உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு, உதவித் தொகை பெறுபவர்கள் அதற்கான தகுதி உள்ளவர்களாக உள்ளனரா என கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதியோர் உதவித்தொகை பெறுபவர்களில் தகுதியில்லாதவர்கள் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு, அவர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அதிகாரி ஒருவர் தெரிவித்தது: தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கும் நோக்கிலும், அதே சமயம் தகுதி இல்லாதவர்களை அப்பட்டியலில் இருந்து நீக்கவும், தற்போது கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியானது 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. மதுரை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதியோர் உதவித் தொகை பெறுகின்றனர். தற்போது எடுத்த கணக்கெடுப்பின்படி, இதில் 10 ஆயிரத்துக்கும் மேலானோர் உதவித்தொகை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
திருப்பரங்குன்றம் தாலுகாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டோர் பட்டியலை, அந்தந்த கிராமங்களில் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக, அவர் தெரிவித்தார்.

0 comments: