Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by Unknown in ,    
கப்பலூர் சுங்கச் சாவடியில் வியாழக்கிழமை முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மதுரை பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த தடை உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 8ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 14 (வியாழக்கிழமை) முதல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
எனவே, காலை 10 மணியில் இருந்து கப்பலூர் சுங்கச் சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். சுங்கச் சாவடியைச் சுற்றிலும் 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவர்கள் தகுந்த அடையாளச் சான்று கொடுத்து, ரூ. 225-க்கான மாதாந்திர பாஸ் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments: