Thursday, August 14, 2014
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு செல்லும் சாலையின் ஒரு பகுதியை வெள்ளைச்சாமி என்பவர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டி உள்ளார். இதனால், காலனிக்கு மக்கள் செல்ல இடையூறாக உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர், திருப்பத்தூர் தாசில்தாருக்கு 4.2.2014 அன்று மனு கொடுத்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பஞ்சாயத்து தலைவர் ரா.கண்ணன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தேவகோட்டை உதவி கலெக்டர், திருப்பத்தூர் தாசில்தாருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், மனுதாரர்கள் கூறுவது போன்ற ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்பதை நேரில் பார்வையிட்டு ஆக்கிரமிப்பு இருந்தால் அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. அந்த கடித நகல் எனக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உத்தரவுப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் 4.2.2014 அன்று கொடுத்த மனுவை திருப்பத்தூர் தாசில்தார் 3 மாதத்துக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையின் போது இருதரப்பினரும் உரிய விளக்கம் கொடுக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது26). இவரது மனைவி பானுபிரியா(25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வே...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...
0 comments:
Post a Comment