Wednesday, August 27, 2014
பல்பு தயாரிக்கும் இயந்திரங்களை விலைக்கு விற்று, அதை வாங்கிய நபர்களிடம் இருந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்புகளை பெற்றுக்கொண்டு, பணம் தராமல் மோசடி செய்த வழக்கில் 2 பேர் தலைமறைவான நிலையில், அதில் ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
உடுமலை, பெதப்பம்பட்டி அருகே சோமவாரப்பட்டியைச் சேர்ந்தவர் டி.வெள்ளியங்கிரி(32). இவருடன், அதே ஊரில் வசித்து வந்த சூர்யபாபு என்பவர் அறிமுகமாகி, தான் பல்பு தயாரிக்கும் தொழில் செய்து வருவதாகவும், அதன் மூலமாக நல்ல லாபம் கிடைப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், பல்பு தயாரிக்கும் இயந்திரம், தயாரிக்கும் முறை குறித்து வெள்ளியங்கிரியை அழைத்துச் சென்று நேரில் சூர்யபாபு விளக்கியுள்ளார்.
இதையடுத்து, வெள்ளியங்கிரி, பல்பு தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்குவதற்காக கடந்த 2011-ஆம் ஆண்டில் சூர்யபாபு மூலமாக தில்லியைச் சேர்ந்த ராஜ்கபூர் என்பவரின் நிறுவனத்தின் பெயருக்கு பல தவணைகளாக மொத்தம் ரூ. 3.63 லட்சத்தை வங்கிக் கணக்கு மூலமாக அனுப்பி வைத்தார். அதன்பின், இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அதன் மூலமாக பல்பு உற்பத்தி செய்த வெள்ளியங்கிரி, ரூ. 4.73 லட்சம் மதிப்பிலான பல்புகளை சூர்யபாபு மூலமாக தில்லியில் உள்ள ராஜ்கபூர் நிறுவனத்திற்கு 5 தவணைகளாக அனுப்பி வைத்தார்.
அதற்கான தொகை ரூ. 4.73 லட்சம் தர வேண்டிய நிலையில், வெள்ளியங்கிரிக்கு ரூ. 50,000 மட்டும் அந்நிறுவனம் கொடுத்தது. மீதித் தொகையை அந்நிறுவனம் தரவில்லை. இந்நிலையில், சோமவாரப்பட்டியில் வசித்து வந்த சூர்யபாபு தலைமறைவானார்.
இந்நிலையில், உடுமலை, திருப்பூர், மூலனூர் பகுதியைச் சேர்ந்த சிலரிடமும் இதேபோன்று சூர்யபாபுவும், ராஜ்கபூரும் சேர்ந்து மோசடி செய்துள்ளதாக வெள்ளியங்கிரிக்கு தெரியவந்தது.
இந்நிலையில், திருப்பூர் அருகே ஐயன்தோட்டம் பாபுஜி நகரில் முத்துராமன் என்பவரின் நிறுவனத்தில் சூர்யபாபு இருப்பதாக தகவல் கிடைத்து, பாதிக்கப்பட்ட வெள்ளியங்கிரி உள்ளிட்டோர் அங்கு சென்று சூர்யபாபுவை பிடித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம்
ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து, சூர்யபாபுவை கைது செய்தனர். தலைமறைவான ராஜ்கபூரை தேடிவருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...


0 comments:
Post a Comment