Wednesday, August 27, 2014
பல்பு தயாரிக்கும் இயந்திரங்களை விலைக்கு விற்று, அதை வாங்கிய நபர்களிடம் இருந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்புகளை பெற்றுக்கொண்டு, பணம் தராமல் மோசடி செய்த வழக்கில் 2 பேர் தலைமறைவான நிலையில், அதில் ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
உடுமலை, பெதப்பம்பட்டி அருகே சோமவாரப்பட்டியைச் சேர்ந்தவர் டி.வெள்ளியங்கிரி(32). இவருடன், அதே ஊரில் வசித்து வந்த சூர்யபாபு என்பவர் அறிமுகமாகி, தான் பல்பு தயாரிக்கும் தொழில் செய்து வருவதாகவும், அதன் மூலமாக நல்ல லாபம் கிடைப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், பல்பு தயாரிக்கும் இயந்திரம், தயாரிக்கும் முறை குறித்து வெள்ளியங்கிரியை அழைத்துச் சென்று நேரில் சூர்யபாபு விளக்கியுள்ளார்.
இதையடுத்து, வெள்ளியங்கிரி, பல்பு தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்குவதற்காக கடந்த 2011-ஆம் ஆண்டில் சூர்யபாபு மூலமாக தில்லியைச் சேர்ந்த ராஜ்கபூர் என்பவரின் நிறுவனத்தின் பெயருக்கு பல தவணைகளாக மொத்தம் ரூ. 3.63 லட்சத்தை வங்கிக் கணக்கு மூலமாக அனுப்பி வைத்தார். அதன்பின், இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அதன் மூலமாக பல்பு உற்பத்தி செய்த வெள்ளியங்கிரி, ரூ. 4.73 லட்சம் மதிப்பிலான பல்புகளை சூர்யபாபு மூலமாக தில்லியில் உள்ள ராஜ்கபூர் நிறுவனத்திற்கு 5 தவணைகளாக அனுப்பி வைத்தார்.
அதற்கான தொகை ரூ. 4.73 லட்சம் தர வேண்டிய நிலையில், வெள்ளியங்கிரிக்கு ரூ. 50,000 மட்டும் அந்நிறுவனம் கொடுத்தது. மீதித் தொகையை அந்நிறுவனம் தரவில்லை. இந்நிலையில், சோமவாரப்பட்டியில் வசித்து வந்த சூர்யபாபு தலைமறைவானார்.
இந்நிலையில், உடுமலை, திருப்பூர், மூலனூர் பகுதியைச் சேர்ந்த சிலரிடமும் இதேபோன்று சூர்யபாபுவும், ராஜ்கபூரும் சேர்ந்து மோசடி செய்துள்ளதாக வெள்ளியங்கிரிக்கு தெரியவந்தது.
இந்நிலையில், திருப்பூர் அருகே ஐயன்தோட்டம் பாபுஜி நகரில் முத்துராமன் என்பவரின் நிறுவனத்தில் சூர்யபாபு இருப்பதாக தகவல் கிடைத்து, பாதிக்கப்பட்ட வெள்ளியங்கிரி உள்ளிட்டோர் அங்கு சென்று சூர்யபாபுவை பிடித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம்
ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து, சூர்யபாபுவை கைது செய்தனர். தலைமறைவான ராஜ்கபூரை தேடிவருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...


0 comments:
Post a Comment