Thursday, August 28, 2014
சித்தோடு வாசவி கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி விற்பனை நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை கலெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு வாசவி கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சியினை கலெக்டர் சண்முகம் குத்துவிளக்கேற்றி வைத்து மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். இந்த கல்லூரி சந்தையில் ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்நத 37 மகளிர் சுயஉதவிக்குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை கண்காட்சியில் வைத்திருந்தனர். இதில் கோராப்பட்டு புடவைகள், காட்டன் புடவைகள், அழகு ஆபரணங்கள், சணல் மற்றும் காட்டன் பைகள், மென் பொம்மைகள், மெழுவர்த்தி, நாப்கின், சுடிதார், நைட்டி வகைகள், ஆயத்த ஆடைகள், பேன்சி பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.
நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் சார்பாக 22 மகளிர் சுயஉதவிக்குழுக்களும், பிற மாவட்டங்களில் இருந்து 15 மகளிர் சுயஉதவிக்குழுக்களும் தங்கள் உற்பத்தி பொருட்களை கண்காட்சியில் விற்பனைக்காக வைத்துள்ளனர். இந்த கண்காட்சி விற்பனையை மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி செய்த பொருட்களை வாங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் ரேணுகாதேவி, கல்லூரி முதல்வர் ஜெயசங்கர், இயக்குநர் சிவக்குமார், உதவி தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் நித்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
#திருச்சி_அண்ணாநகர் #கஞ்சா_செடிகள்_அழிப்பு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ராயல் சித்திக் அவர்களின் பெரும் முயற்சியால் தி...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
உடுமலை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் அரிமா சங்க தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. முக...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment